​​திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் பக்தர் உயிரிழப்பு

காயமடைந்த தாய், மகள் மருத்துவமனையில் அனுமதி
​​திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் பக்தர் உயிரிழப்பு
Updated on
2 min read

திருச்சி: ​திருச்சி சமயபுரம் மாரி​யம்​மன் கோயில் மண்டப மேற்​கூரை நேற்று இடிந்து விழுந்​த​தில் பெண் பக்​தர் உயி​ரிழந்​தார். காயமடைந்த தாய், மகள் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்.

திருச்சி மாவட்​டம் சமயபுரம் மாரி​யம்​மன் கோயில் பூச்​சொரிதல் விழா கடந்த 4 வாரங்​களாக நடை​பெற்று வரு​கிறது. இதில் வாரந்​தோறும் ஞாயிறுக்​கிழமை அன்று பூச்​சொரிதல் விழா விமரிசை​யாக நடை​பெறும்.

அதன்​படி, 4-வது வார​மாக பூச்​சொரிதல் விழா நேற்று நடை​பெற்​றது. இதற்​காக உள்​ளூர், வெளி மாவட்ட பக்​தர்​கள் நேற்று முன்​தினம் இரவே வந்து கோயில் வளாகத்​தில் தங்​கினர்.

இதில், திரு​வை​யாறு, செபாஸ்​தி​யார் கோயில் தெரு​வைச் சேர்ந்த மோகன் மனைவி நதியா (32), அவரது உறவினர்​களான தஞ்​சாவூர் மாவட்​டம் கள்​ளப்​பெரம்​பூர் மாதாக்​கோவில் தெரு​வைச்சேர்ந்த சண்​முகசுந்​தரம் மனைவி ரஞ்​சனி (35), அவரது மகள் பா​பிக் ஷா( 14) ஆகியோ​ரும் கோயிலுக்கு நேற்று முன்​தினம் இரவு வந்து கோயில் சந்​நிதி வீதி​யில் உள்ள நுழைவு​வா​யில் மண்​டபத்​தில் படுத்து உறங்​கிக் கொண்​டிருந்​தனர்.

இந்​நிலை​யில், நேற்று அதி​காலை 2 மணி அளவில் மண்​டபத்​தின் கான்​கிரீட் மேற்​கூரை சுவர் இடிந்து கீழே உறங்​கிக் கொண்டிருந்த நதியா உள்​ளிட்ட 3 பேர் மீதும் விழுந்​தது. இதில், பலத்​த​காயமடைந்த நதியா அந்த இடத்​திலேயே பரி​தாப​மாக உயி​ரிழந்​தார்.

மேலும், பலத்த காயமடைந்த ரஞ்​சனி மற்றும் பாபிக் ஷா ஆகியோரை அங்​கிருந்த மற்ற பக்​தர்​கள் மீட்​டு, உடனடி​யாக ஆம்​புலன்ஸ் உதவி​யுடன் திருச்சி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

தகவலறிந்த சமயபுரம் காவல் ஆய்​வாளர் தண்​ட​பாணி தலை​மையி​லான போலீ​ஸார், அங்கு விரைந்து வந்து நதி​யா​வின் உடலை பிரேத பரிசோதனைக்​காக திருச்சி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். மேலும், இதுகுறித்து வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்​கின்​றனர்.

சமயபுரம் கோயில் இணை ஆணை​யர் சூரிய​நா​ராயணன் மற்​றும் கோயில் அலு​வலர்​கள் விரைந்து வந்து மேற்​கூரை இடிந்து விழுந்த மண்டப பகு​தியை பார்​வை​யிட்​டனர்.

இச்​சம்​பவத்தை தொடர்ந்​து, கோயி​லின் கிழக்கு நுழைவு​வா​யில் மண்​டபப் பகுதி இரும்பு தடுப்​பு​கள் வைத்து அடைக்​கப்​பட்​டது. வடக்கு வாசல், தெற்கு வாசல் வழி​யாக பக்​தர்​கள் உள்ளே அனு​ம​திக்​கப்​பட்​டனர். மேற்கு வாசல் வழி​யாக பக்​தர்​கள் வெளியே செல்ல ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

அண்ணாமலை கண்டனம்

இதனிடையே இந்த விவ​காரத்​தில் அமைச்​சர் சேகர்​பாபு பதில் சொல்​லியே தீர வேண்​டும் என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவு:

இக்​கோயி​லில் கும்பாபிஷேகம் நடந்து நான்கு ஆண்​டு​கள் கூட முழுமை பெற​வில்​லை. இந்த நிலை​யில், கோவில் மண்​டபத்​தின் மேற்​கூரை இடிந்து விழு​வது என்​பது திமுக அரசு, எந்த லட்​சணத்​தில், ஆலயத் திருப்​பணி​களை மேற்​கொண்டு வரு​கிறது என்​ப​தற்​கான வெளிப்​படை​யான சான்​றாகும்.

திமுக அரசு பக்​தர்​களின் உயிரை துச்​ச​மாக நினைக்​கிறது என்​பது இதன்​மூலம் தெரிய​வரு​கிறது. கடந்த ஐந்து ஆண்​டு​களில், இவர்​கள் செய்த அனைத்து ஆலயத் திருப்​பணி​களை​யும் ஆய்வு செய்ய வேண்​டும்.

இந்த துயர சம்​பவத்​துக்​குப் பின்​னணி​யில் உள்ள அனை​வரின் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். அமைச்​சர் சேகர்​பாபு, பக்​தர்​களின் பாது​காப்பை உறுதி செய்​யத் தவறியதற்கு பதில் சொல்​லியே தீர வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

​​திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் பக்தர் உயிரிழப்பு
கோவை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: பட்டியலில் பெயர் இல்லாததால் அண்ணாமலை பங்கேற்கவில்லை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in