மேகேதாட்டு பகுதியில் ​போராட்டம் நடத்த புறப்பட்ட விவசாயிகள் ஓசூர் எல்லையில் தடுத்து நிறுத்தம்

அனைத்​துக் கட்சி கூட்​டத்தை கூட்ட பி.ஆர்​.​பாண்​டியன் கோரிக்கை
ஓசூரிலிருந்து மேகேதாட்டு நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக புறப்பட்டுச் சென்ற பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினர்.

ஓசூரிலிருந்து மேகேதாட்டு நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக புறப்பட்டுச் சென்ற பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினர்.

Updated on
1 min read

ஓசூர்: மேகே​தாட்டு பகு​தி​யில் முற்​றுகை போராட்​டம் நடத்த ஓசூரிலிருந்து பேரணி​யாக புறப்​பட்ட விவ​சா​யிகளை மாநில எல்​லை​யில் போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர். மேகே​தாட்டு அணை விவ​காரம் தொடர்​பாக அனைத்​துக் கட்சி கூட்​டத்தை கூட்ட வேண்​டும் என தமிழக காவிரி விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் பி.ஆர். பாண்​டியன் கோரிக்கை விடுத்​துள்​ளார்.

கர்​நாடக அரசு காவிரி​யின் குறுக்கே மேகே​தாட்டுவில் அணை கட்​டும் நடவடிக்​கையை தடுத்து நிறுத்த வேண்டும். கர்​நாடக அரசு தமிழகத்துக்கு உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்​பின்​படி மாதாந்​திர நீர் பங்​கீட்டை வழங்க வேண்​டும். ராசிமணலில் அணை கட்ட அனு​மதி வழங்க வேண்​டும் என்​பதை வலி​யுறுத்தி மேகே​தாட்டு பகு​தி​யில் முற்​றுகை போராட்​டம் நடத்த அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டது.

இதன்​படி பி.ஆர்​.​பாண்​டியன் தலை​மை​யில் 150-க்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகள் தஞ்​சையி​லிருந்து வாகன பேரணி​யாக ஓசூருக்கு நேற்று வந்​தனர்.தொடர்ந்​து, மேகே​தாட்டு பகு​தி​யில் முற்​றுகை போராட்​டத்​தில் ஈடுபட ஓசூர் மூக்​காண்​டப்​பள்​ளியி​லிருந்து பேரணி​யாக புறப்​பட்​டனர். தமிழக எல்​லை​யான ஜுஜு​வாடி​யில் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த எஸ்பி தங்​கதுரை தலை​மையி​லான போலீ​ஸார், விவ​சா​யிகளைத் தடுத்து நிறுத்​தினர்.

இதுதொடர்​பாக பி.ஆர்​.​பாண்​டியன் கூறிய​தாவது: மேகே​தாட்டு அணைக்​கான வரைவுத்திட்ட அறிக்​கை​யைத் தயாரிக்க கர்​நாடக அரசுக்கு அனு​மதி வழங்​கப்​பட்​டதை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்பட்ட மனு தள்​ளுபடி செய்யப்​பட்​டுள்​ளது. எனினும், தமிழகத்​தின் அனு​ம​தி​யின்றி அணை கட்டமுடி​யாது என்று நீதி​மன்​றம் கூறியுள்​ளது.

ஆனால், கர்​நாடக துணை முதல்​வர் சிவக்​கு​மார் நீதி​மன்​றத்தை அவம​திக்​கும் வகை​யில் மேகே​தாட்​டு​வில் அணை கட்​டப்போவ​தாகச் சவால் விடு​கிறார். இதற்கு அம்மாநில விவ​சா​யிகளே எதிர்ப்​புத் தெரிவிக்​கின்​றனர். எனவே, தமிழக முதல்​வர் அனைத்​துக்​கட்சி கூட்​டத்​தைக் கூட்டி அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்​டும். மத்​திய அரசு இதை தடுக்க வேண்டும். இவ்​வாறு அவர் கூறி​னார். இதனிடையே, கர்​நாடக மாநில எல்​லையான அத்​திப்​பள்​ளி​யில் 100-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்​.

<div class="paragraphs"><p>ஓசூரிலிருந்து மேகேதாட்டு நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக புறப்பட்டுச் சென்ற பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினர்.</p></div>
27 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு ஜூன் 18-ல் தேர்தல்: இன்று வேட்பு மனு தாக்கல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in