கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தரையில் பாலை கொட்டி விவசாயிகள் போராட்டம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பொள்ளாச்சி அருகே தரையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பொள்ளாச்சி அருகே தரையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated on
1 min read

பொள்ளாச்சி: தமிழகத்​தில் பால் கொள்​முதல் விலையை லிட்​டருக்கு ரூ.50 உயர்த்தி வழங்க வேண்​டும் என, விவ​சா​யிகள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர். ஆனால் தமிழக அரசு ஊக்​கத்​தொகை ஒரு ரூபாய் உயர்த்தி அறி​வித்​ததை விவ​சா​யிகள் ஏற்​க​வில்​லை.

இந்​நிலை​யில், பொள்​ளாச்சி அருகே உள்ள மாப்​பிள்ளை கவுண்​டன் புதூர் கொள்​முதல் நிலை​யத்​துக்கு வந்த விவ​சா​யிகள் பாலை கொள்​முதல் நிலை​யத்​துக்கு வழங்​காமல், வீதி​யில் கொட்டி போராட்​டம் நடத்​தினர்.

இதுகுறித்து விவ​சா​யிகள் கூறும்​போது, “கேரளாவில் லிட்​டருக்கு ரூ.53 வரை வழங்​கப்​படு​கிறது. எங்​களுக்கு வழங்​கப்​படும் தொகை​யானது எந்த விதத்​தி​லும் உபயோகம் இல்லை. மாட்​டுக்கு தேவை​யான தீவனம் அதிக விலைக்கு விற்​பனை செய்​யப்​படு​கிறது. இதனால் பால் உற்​பத்​தியை நஷ்டத்​தில் செய்ய வேண்​டிய நிலை ஏற்​பட்டு வரு​கிறது. மேலும், தமிழக அரசு பயிர் கடனை தள்​ளு​படி செய்​வ​தாக அறி​வித்​திருந்​தது.

ஆனால் முழு​மை​யாக தள்​ளு​படி செய்​ய​வில்​லை. இதனால் விவ​சா​யிகள் பெரும் துயரத்​துக்கு உள்​ளாகி உள்​ளார்​கள். பால் கொள்​முதல் விலையை உயர்த்தி வழங்​கி​னால் உற்​பத்​தி​யாளர்​களின் வாழ்​வா​தா​ரம் மேம்​படும். எனவே, லிட்​டருக்கு 50 ரூபா​யாக உயர்த்தி வழங்க வேண்​டும்” என்​றனர்.

<div class="paragraphs"><p>பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பொள்ளாச்சி அருகே தரையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.</p></div>
“இவிஎம் இயந்திரங்களை யாரும் ஹேக் செய்ய முடியாது” - தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in