நெல்லை அருகே 8-வது நாளாக விவசாயி உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம்

நெல்லை அருகே 8-வது நாளாக விவசாயி உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம்
Updated on
1 min read

திருநெல்வேலி: ​திருநெல்​வேலி மாவட்​டம் மூலைக்கரைப்​பட்​டி​யில் கொலை செய்​யப்​பட்ட விவ​சாயி உடலை வாங்க மறுத்து 8-வது நாளாக அவரது உறவினர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், அவரது மகளை தற்​கொலைக்கு தூண்​டிய​தாக 3 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். மூலைக்​கரைப்​பட்டி அருகே வடக்கு நெல்​லை​யப்​பபுரத்தை சேர்ந்​தவர் விவ​சாயி ஆறு​முகம் (53). கடந்த 17-ம் தேதி வயலுக்​குச் செல்​லும் வழி​யில் கொலை செய்​யப்​பட்​டார்.

இதுதொடர்​பாக, மூன்​ற டைப்பு போலீ​ஸார் வழக்கு பதிந்து விசா​ரித்து வரு​கின்றனர். இடப்​பிரச்​சினை​யில் அதே ஊரைச் சேர்ந்த சிலருக்​கு, ஆறு​முகத்​துடன் முன்​விரோதம் இருந்​த​தாக​வும், அதன் காரண​மாக அவர் கொலை செய்​யப்​பட்​டிருக்​கலாம் என்ற கோணத்​திலும் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர்.

இதுதொடர்​பாக, 3 பேரை பிடித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கிறார்​கள். இதனிடையே, ஆறு​முகத்​தின் மகள் பேபிகனி (23) கடந்த 2 நாட்​களுக்கு முன்பு வீட்​டில் தற்​கொலை செய்து கொண்​டார்.

இதன் தொடர்ச்​சி​யாக, ஆறு​முகம் கொலையில் உண்​மை​ குற்​ற​வாளி​களை கண்டு​பிடிக்க வலி​யுறுத்தி தந்​தை, மகள் ஆகியோரின் உடல்​களை வாங்க மறுத்து உறவினர்​கள் நேற்று 8-வது நாளாக போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கிறார்​கள்.

பேபிகனி எழு​தி​யிருந்​த கடிதத்​தின் அடிப்​படை​யில், அவரை தற்​கொலைக்கு தூண்​டிய​தாக, நெல்​லை​யப்​பபுரத்​தைச் சேர்ந்த சூசை​முத்​து, செல்​வகு​மார், ரமேஷ் ஆகிய 3 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். அவர்​களிடம் விசா​ரணை நடந்து வருகிறது.

நெல்லை அருகே 8-வது நாளாக விவசாயி உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம்
“பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு” - பழ.நெடுமாறன் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in