மாற்றுத் திறனாளிகள் போராட்டம் குறித்து தவறான தகவல் தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு: சங்கத்தின் தலைவர் அறிக்கை

மாற்றுத் திறனாளிகள் போராட்டம் குறித்து தவறான தகவல் தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு: சங்கத்தின் தலைவர் அறிக்கை
Updated on
1 min read

சென்னை: ​மாற்​றுத்​திற​னாளி​கள் போராட்​டத்​தின்​போது நடை​பெற்ற தாக்​குதல் குறித்து அமைச்​சர் எ.வ. வேலு கூறியது தவறான தகவல் என்று தமிழக அனைத்து வகை மாற்​றுத்​திற​னாளி​கள் மற்​றும் பாது​காப்​போர் உரிமைகளுக்​கான சங்​கத் தலை​வர் தோ.​வில்​சன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: பிப்​.19 அன்று ​பேர​வை​யில் பேசிய மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சட்​டப்பேரவை உறுப்​பினர் எம்​.சின்​னதுரை, "மாத உதவித் தொகையை ரூ.1,500-ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தக் கோரி போராடிய மாற்​றுத் திற​னாளி​களை காவல்​துறை நடத்​திய விதம் கண்​டிக்​கத்​தக்​கது. அமைப்​பின் பொதுச்​செய​லா​ளர் பா.ஜான்​சி​ராணியை காவல்​துறை நடத்​திய விதம் ஏற்​புடையதல்ல" என்​றார்.

இதற்கு பதிலளித்த அமைச்​சர் எ.வ.வேலு, ஜான்​சி​ராணியை காவல்​துறை​ தாக்​க​வில்லை என்​றும் அவர் தவறி விழுந்​ததாகவும் அவரை உடனே ஆம்​புலன்​ஸில் மருத்​து​வ​மனைக்கு போலீஸார்தான் அழைத்​துச் சென்​றதாகவும் தெரி​வித்​தார்.

அமைச்​சர் எ.வ.வேலு சட்​டப்​பேர​வை​யில் கூறியது உண்​மைக்கு புறம்​பானது. இதில் உள்​நோக்​கம் இல்​லை​யெனில், கண்​ணி​ய​மான காக்​கிச்​சட்​டை​யில் பெயர் பொறிக்​கப்​ப​டாத (பெயர்​களை கழற்றி வைத்​து​விட்​டு) உயர் அதி​காரி​கள் முதற் கொண்டு காவலர்​கள் வரை இந்த இழி​வான செயலில் ஈடு​பட்​டது எதற்​கு. மேலும், எங்களிடம் உரிய ஆதா​ரங்​கள் உள்​ளன. காவல் துறை​யினரின் இந்த காட்​டுமி​ராண்டி செயலை முறைப்​படி சந்​திப்போம். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்​.

மாற்றுத் திறனாளிகள் போராட்டம் குறித்து தவறான தகவல் தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு: சங்கத்தின் தலைவர் அறிக்கை
மீண்டும் ரூ.1.17 லட்சத்தை தாண்டியது தங்கம்: வியாபாரிகள் சொல்வது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in