அதிமுக இரு அணியாகப் பிரிந்த வேதனையில் தற்கொலை: கட்சி நிர்வாகியின் கடைசி ஆசைப்படி இறுதி அஞ்சலியில் பங்கேற்ற இபிஎஸ்

ரூ.55 லட்சம் நிவாரணம் அறிவித்து குடும்பத்தினருக்கு ஆறுதல்
அதிமுக இரு அணியாகப் பிரிந்த வேதனையில் தற்கொலை: கட்சி நிர்வாகியின் கடைசி ஆசைப்படி இறுதி அஞ்சலியில் பங்கேற்ற இபிஎஸ்
Updated on
2 min read

தஞ்சாவூர்: அ​தி​முகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக மன உளைச்​சலில் இருந்த கட்சி நிர்​வாகி தீக்​குளித்து தற்​கொலை செய்து கொண்​டார். ‘கட்சி நிர்வாகிகள் ஒன்றுசேர வேண்டும். பழனிசாமி இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும்’ என்று அவர் கூறியிருந்ததை அடுத்து, அவரது உடலுக்கு அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி அஞ்​சலி செலுத்​தி​னார்.

தஞ்​சாவூர் மாவட்​டம் கும்​பகோணம் அருகே உள்ள திருப்​பனந்​தாள் வளை​யல்​காரத் தெரு​வைச் சேர்ந்​தவர் மகேந்​திரன் (37). இவர் திருப்​பனந்​தாளில் பூக்​கடை நடத்தி வந்​தார். அதி​முக​வில் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செய​லா​ள​ராக பொறுப்பு வகித்​தார். இவருக்கு முனீஸ்​வரி (32) என்ற மனை​வி​யும், நித்ஸ்ரீ (2) என்ற மகளும் உள்​ளனர்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு பிறகு, அதி​முக​ இரு அணியாகப் பிரிந்தது. இதனால் மகேந்​திரன் சில நாட்​களாக மிக​வும் மன உளைச்​சலில் இருந்து வந்​தார். இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் இரவு தனது வீட்​டின் அரு​கிலேயே தனது உடலில் பெட்​ரோல் ஊற்றி தீக்​குளித்து தற்​கொலை செய்து கொண்​டார். இதுகுறித்து திருப்பனந்​தாள் போலீ​ஸார் வழக்​கு பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று திருப்​பனந்​தாளில் உள்ள அவரது வீட்​டுக்கு வந்து மகேந்​திரனின் உடலுக்கு மாலை அணி​வித்து அஞ்சலி செலுத்​தி, குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் கூறி​னார்.

அப்​போது செய்​தி​யாளர்​களிடம் பழனி​சாமி கூறிய​தாவது: அதி​முக தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செய​லா​ளர் மகேந்​திரன் தனது இன்​னு​யிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்​சி​யும், மன வேதனை​யும் அளிக்​கிறது. இந்​த பகு​தி​யில் சிறப்​பான முறை​யில் கட்​சிப் பணி​யாற்​றி, கட்சி நிர்​வாகி​களிடமும், தொண்​டர்​களிட​மும் நல்ல பெயர் பெற்​றவர். தலை​மைக்​கும் மிகுந்த விசு​வாச​மாக செயல்​பட்​ட​வர். அவருடைய மறைவு ஈடுசெய்ய முடி​யாத இழப்​பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்​பத்​தினருக்​கும், அதி​முக​வினருக்​கும் ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

மகேந்​திரனின் குழந்​தை​யின் முழு படிப்​புச் செல​வை​யும் அதி​முக ஏற்​றுக் கொள்​ளும். அதே​போல, கட்​சித் தலைமை சார்​பில் ரூ.30 லட்​சம், தஞ்​சாவூர் கிழக்கு மாவட்ட அதி​முக சார்​பில் ரூ.25 லட்​ச​ம் என ரூ.55 லட்​சம் நிவாரணம் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும். இனி கட்​சி​யினர் யாரும் இதே​போன்ற சம்​பவங்​களில் ஈடுபட வேண்​டாம் என தாழ்​மை​யுடன் தொண்​டர்​களின் பாதம் பணிந்​து, வணங்கி கேட்​டுக்கொள்​கிறேன். இவ்வாறு அவர் கண்​ணீர் மல்க தெரி​வித்​தார்.

தற்​கொலைக்கு முன்பு உருக்​க​மான பதிவு

அதி​முக தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செய​லா​ளர் மகேந்​திரன் நேற்று முன்​தினம் இரவு தீக்குளித்து தற்​கொலை செய்து கொண்டார். முன்னதாக, முகநூலில் ஒரு வீடியோவை அவர் பதிவு செய்​துள்​ளார். அதில், ‘‘அதி​முக​வில் சில நாட்​களாக நடந்து கொண்​டிருக்​கும் பிரச்​சினை​களை பார்க்​கும்​போது என்​னைப் போல எளிய தொண்​டர்​கள் மிக​வும் மனவேதனை​யில் இருக்​கிறோம். மீண்​டும் எடப்​பாடி​யார் தலைமை​யில் அதி​முக ஆட்சி அமைக்க வேண்​டும்.

எனது இறப்​புக்கு பிற​காவது அதி​முக நிர்​வாகி​களும், தொண்டர்களும் ஒன்றுசேர்ந்து மீண்​டும் அம்​மா​வின் ஆட்சி அமைக்க வேண்டும். என்​னுடன் இது​வரை பயணித்த கட்சி நிர்​வாகி​கள் அனைவருக்​கும் நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன். எனது கடைசி ஆசை... எனது உடலுக்கு பொதுச் செய​லா​ளர் அஞ்​சலி செலுத்தினால், எனது ஆன்மா சாந்தி அடை​யும்’’ என்று அவர் தெரி​வித்​திருந்தார்.

அதிமுக இரு அணியாகப் பிரிந்த வேதனையில் தற்கொலை: கட்சி நிர்வாகியின் கடைசி ஆசைப்படி இறுதி அஞ்சலியில் பங்கேற்ற இபிஎஸ்
தமிழகத்தில் சகோதரிகளை நாம் இழப்பதற்கு போதைப் பொருள் கலாச்சாரமே காரணம்: திருச்சியில் முதல்வர் விஜய் வேதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in