நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்கும் திமுக அரசு: இபிஎஸ் குற்றச்சாட்டு

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்கும் திமுக அரசு: இபிஎஸ் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் நெசவாளர் கூட்​டுறவு சங்கங்களை அழிக்​கும் முயற்​சி​யில் திமுக அரசு ஈடுபட்டு வரு​வ​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: தமிழகத்​தில் 2021-ல் திமுக அரசு பொறுப்​பேற்​றவுடன், பொங்​கலுக்கு வழங்​கும் இலவச வேட்​டி, சேலைகளை ஏப்ரல், மே மாதங்​களில்​தான் வழங்கி வரு​கிறது.

மேலும், 50 சதவீதத்​துக்​கும் மேல் வெளி மாநிலங்​களில் இருந்து முறை​கே​டாக வாங்​கப்​படு​வ​தால், கைத்​தறி மற்​றும் விசைத்​தறித் தொழிலா​ளர்​கள் வேலை இழந்​துள்​ளனர்.

மேலும், கைத்​தறி​யில் 4 லட்​சம் வேட்​டிகளி​லும், விசைத்​தறி​யில் 13 லட்​சம் வேட்​டிகளி​லும் நூலின் தன்மை மாறி​யுள்​ளது என்று கூறி சங்​கங்​களுக்கே திருப்பி அனுப்ப திமுக அரசு உத்​தர​விட்​டிருக்​கிறது.

தரம் குறைந்த நூலை விநி​யோகித்​ததே கைத்​தறித் துறை​தான் என்​ப​தை​யும், இதில் நடை​பெற்ற ஊழலை​ மறைத்​து, கூட்​டுறவு சங்​கங்​கள் மீது பழி​போட்டு தப்​பிக்​கப் பார்க்​கிறது திமுக அரசு.

10 ஆயிரம் வேட்​டிகளுக்கு 20 வேட்​டிகளை மட்​டும் மாதிரி​யாக எடுத்​து, தர சோதனை செய்​துள்​ள​தாக நெசவாளர் கூட்​டுறவு சங்​கங்​களைச் சேர்ந்​தவர்​கள் குற்​றம் சாட்​டு​கிறார்கள்.

ஏற்​கெனவே நஷ்டத்​தில் இயங்​கிக் கொண்​டிருக்​கும் சங்​கங்​களுக்​கு, வேட்​டிகளை திருப்பி அனுப்​புவ​தால், அனைத்து சங்​கங்​களும் பெரிய அளவில் நஷ்டப்​பட்​டு, மூடும் சூழல் ஏற் படும். எனவே, அனைத்து வேட்​டிகளை​யும் மறுதரப் பரிசோதனை செய்ய வேண்​டும்.

நெசவாளர் கூட்​டுறவு சங்​கங்​களை அழிக்​கும் முயற்​சி​யில் திமுக அரசு ஈடு​படு​கிறது. தேர்​தலில் நெசவாளர்கள் திமுக அரசுக்கு தக்க பதிலடி தரு​வார்​கள். இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்கும் திமுக அரசு: இபிஎஸ் குற்றச்சாட்டு
பீட்டா அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு யானைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in