எஸ்ஐஆர்-ஐ ரத்து செய்யக் கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு

எஸ்ஐஆர்-ஐ ரத்து செய்யக் கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு
Updated on
1 min read

புதுடெல்லி: தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தத்தை ரத்து செய்​யக் கோரும் திமுக உள்ளிட்ட தமிழக கட்​சிகளின் மனுக்​களை தள்​ளு​படி செய்ய வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றத்​தில் தேர்​தல் ஆணையம் பதில் மனு தாக்​கல் செய்​துள்​ளது.

எஸ்​ஐஆர்-ஐ ரத்து செய்​யக் கோரி திமுக​வின் அமைப்பு செய​லா​ளர் ஆர் எஸ் பார​தி, தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, மார்க்​சிஸ்ட் மாநில செய​லர் பி.சண்​முகம், இந்திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லர் எம்.வீர​பாண்​டியன் உள்ளிட்டோர் ரிட் மனுக்​களை தாக்​கல் செய்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், பிஹார், மேற்கு வங்க மாநிலங்​கள் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப்பணியை எதிர்த்த மனுக்​களு​டன், எஸ்​ஐஆரை தள்ளி வைக்க கேரள அரசின் மனுவுடன் தமிழக கட்சிகள் தாக்​கல் செய்​துள்ள ரிட் மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​தி​ சூர்​ய​காந்த், நீதிபதி ஜோய்​மால்யா பக்சி ஆகியோர் அமர்வு விசா​ரிக்​கிறது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்​தின் செயலர் பவன் திவான் சார்​பில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள பதில் மனு​வில் கூறி​யிருப்​ப​தவது: வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த அறிவிக்கை அரசமைப்​புச்​சட்​டத்​தின் அடிப்​படை உரிமை​களை​யும் மக்​கள் பிர​தி​நி​தித்​துவச்சட்​டத்​தை​யும் மீறவில்​லை. தகு​தி​யற்ற வாக்​காளர்​களை நீக்கி தேர்​தலின் புனிதத்தை காப்​பாற்​றவே மேற்​கொள்​ளப்​படு​கிறது.

வாக்​காளர்​களின் குடியுரிமையை சரி​பார்க்​கும் உரிமை தேர்​தல் ஆணை​யத்​துக்கு இல்லை என்ற வாதம் தவறானது. குடி​யுரிமை சரி​பார்க்க தாமாக விசா​ரிக்க மக்​கள் பிர​தி​நி​தித் துவச் சட்​டத்​தின் 22-ஆவது பிரி​வின்​கீழ் தேர்​தல் பதிவு அலு​வலருக்கு அதி​காரம் உள்ளது.

எஸ்ஐஆர் பணியை எந்த தொகு​திக்​கும், எப்​போது வேண்​டு​மா​னாலும் நடத்த ஆணை​யத்​துக்கு அதி​காரம் உண்​டு. ஜனநாயகத்தை வலுப்​படுத்​தும் இந்த நடவடிக்​கைக்கு முட்​டுக்​கட்டை போடும் நோக்​கிலும், அரசி​யல் லாபத்​துக்​காக​வும், தவறான பிரச்​சா​ரம் நோக்​கிலும் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள இந்த மனுக்​களை அபராதத்​துடன் தள்​ளு​படி செய்​ய வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

எஸ்ஐஆர்-ஐ ரத்து செய்யக் கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு
‘டிஜிட்டல் அரஸ்ட்’ மூலம் 71 வயது முதியவரிடம் ரூ.2 கோடி மோசடி: ஹைதராபாத்தில் 3 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in