மதுரை: ஜல்லிக்கட்டில் காளை முட்டி முதியவர் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப்படம்

பிரதிநிதித்துவப்படம்

Updated on
1 min read

மதுரை: மதுரை மேல அனுப்​பானடி வீட்​டு​வசதி வாரியக் குடி​யிருப்​புப் பகு​தி​யைச் சேர்ந்​தவர் செல்​வ​ராஜ் (68). இவர் கடந்த 16-ம் தேதி பாலமேடு ஜல்​லிக்​கட்​டுப் போட்​டியைப் பார்க்​கச் சென்​றார். காளை​கள் சேகரிப்​புப் பகுதி அருகே நின்று வேடிக்​கைப் பார்த்​தார்.

அப்​போது, வாடி​வாசலில் இருந்து வந்த காளை அவரை முட்​டித் தள்​ளியது. இதில் காயமடைந்த செல்​வ​ராஜ் முதலுதவிக்​குப் பிறகு மதுரை அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்​தினம் இரவு உயி​ரிழந்​தார். இது தொடர்​பாக பாலமேடு போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப்படம்</p></div>
கழிப்பறையில் செல்போன் கேமரா மூலம் பெண் காவலர்களை வீடியோ எடுத்த எஸ்எஸ்ஐ கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in