

பிரதிநிதித்துவப்படம்
மதுரை: மதுரை மேல அனுப்பானடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (68). இவர் கடந்த 16-ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்கச் சென்றார். காளைகள் சேகரிப்புப் பகுதி அருகே நின்று வேடிக்கைப் பார்த்தார்.
அப்போது, வாடிவாசலில் இருந்து வந்த காளை அவரை முட்டித் தள்ளியது. இதில் காயமடைந்த செல்வராஜ் முதலுதவிக்குப் பிறகு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது தொடர்பாக பாலமேடு போலீஸார் விசாரிக்கின்றனர்.