பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம்

ஆதாரங்கள், ரகசிய விசாரணை குறிப்புகளுடன் அனுப்பப்பட்டுள்ளது
பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம்
Updated on
2 min read

சென்னை: பணமோசடி வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜியை விசா​ரிக்க அனு​மதி அளிக்​கக் கோரி தமிழக அரசுக்கு அமலாக்​கத் துறை கடிதம் எழுதி உள்ளது.

கடந்த 2011 முதல் 2016 வரையி​லான அதி​முக ஆட்​சி​யில், போக்​கு​வரத்து துறை அமைச்​ச​ராக இருந்த செந்​தில் பாலாஜி, போக்​கு​வரத்து துறை​யில் வேலை வாங்​கித் தரு​வ​தாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது‌.

இந்த விவ​காரம் தொடர்​பாக செந்​தில் பாலாஜி, அவரது சகோ​தரர் அசோக்​கு​மார் உள்​ளிட்​டோர் மீது பண மோசடி குற்​றச்​சாட்​டின் பேரில் அமலாக்​கத் துறை வழக்​குப் பதிவு செய்​தது. அவர்​கள் மீது வழக்கு தொடர மாநில அரசு அனு​மதி அளிக்​காத​தால் நீதி​மன்ற விசா​ரணை இன்​னும் தொடங்​காமல் உள்​ளது.

இந்​நிலை​யில்​தான், போக்​கு​வரத்து துறை​யில் வேலை வாங்​கித் தரு​வ​தாக பணம் பெற்​ற​தாகக் கூறப்​படும் பணமோசடி வழக்​கில், முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மற்​றும் சிலருக்கு எதி​ராக சட்​டப்​பூர்வ நடவடிக்கை எடுக்க அனு​மதிகோரி தமிழக தலை​மைச் செய​லா​ளர் சாய் குமாருக்கு அமலாக்​கத் துறை கடிதம் எழு​தி​யுள்ளது.

திமுக அரசு அனுமதி மறுப்பு

முன்​ன​தாக, கடந்த 7 மாதங்​களுக்கு முன்பு இதே வழக்​கில் செந்​தில் பாலாஜியை விசா​ரணை நடத்த அப்​போதைய திமுக அரசு அனு​மதி மறுத்​திருந்த நிலை​யில், தற்​போது அமலாக்​கத் துறை மீண்​டும் அனு​மதி கோரி கடிதம் எழு​தி​யுள்​ளது.

கடந்த 15-ம் தேதி அமலாக்​கத் துறை அனுப்​பி​யுள்ள 3 பக்​கங்​கள் கொண்ட கடிதத்​தில் கடந்​தாண்டு அப்​போதைய ஆளுநருக்கு அமலாக்​கத் துறை சார்​பில் அனு​மதி கோரி கடிதம் அனுப்​பப்​பட்​டது.

மாநில அரசின் அறி​வுறுத்​தலின்​படி, அக்​கடிதம் திருப்பி அனுப்​பப்​பட்​டது. அக்.2025-ல் அப்​போதைய தலைமைச் செய​லா​ளர் ஆளுநருக்கு எழு​திய கடிதத்​தில், அரசு ஊழியரை விசா​ரிக்க மாநில அரசே தகுதி​யான அதி​காரம் கொண்டது.

எனவே, அமலாக்​கத்துறை ஆளுநரை அணுகு​வதற்​குப் பதிலாக நேரடி​யாக தலை​மைச் செய​லா​ள​ருக்​குத்​தான் கடிதம் எழு​தி​யிருக்க வேண்​டும் என்று குறிப்​பிட்​டிருந்​தார்.

அதன் அடிப்​படை​யில் தற்​போது அமலாக்​கத் துறை தகுந்த ஆதா​ரங்​கள், ரகசிய விசா​ரணை குறிப்​பு​களு​டன் தலை​மைச் செய​லா​ள​ருக்கு புதிய கடிதத்தை அனுப்பி உள்​ளது.

தற்​போது ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக தலை​வர் விஜய் தலை​மையி​லான ஆட்சி தமிழகத்​தில் நடை​பெறு​வ​தால் அவர் என்ன முடிவு எடுக்​கப்​போகிறார் என்​பதை பொறுத்தே இந்த பணமோசடி வழக்​கின் போக்கு செல்​லும் என அமலாக்​கத் துறை அதி​காரி​கள் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இந்த பணமோசடி வழக்​கில் 2023 ஜூன் 14-ம் தேதி செந்​தில் பாலாஜி அமலாக்​கத் துறை​யால் கைது செய்​யப்​பட்​டார். பின்​னர், 471 நாள் சிறை​வாசத்​துக்கு பிறகு செப்​டம்​பர் 2024-ல் உச்ச நீதி​மன்​றம் அவருக்கு நிபந்​தனை ஜாமீன் வழங்​கியது.

இதனைத் தொடர்ந்து அமலாக்​கத்​துறை சென்னை சிறப்பு நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரி​கை​யைத் தாக்​கல் செய்​திருந்​தா​லும், குற்​றம் நடந்​த​தாகக் கூறப்​படும் கால​கட்​டத்தில் அவர் அமைச்​ச​ராக இருந்​த​தால், மாநில அரசின் வி​சா​ரணை அனு​மதி இன்​னும் கிடைக்​கப் பெற​வில்​லை. இதனால் நீதி​மன்​ற வி​சா​ரணை இன்​னும்​ தொடங்​கப்​ப​டா​மல் நிலுவையில் உள்ளது.

பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம்
‘கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்’ - பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in