‘கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்’ - பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

‘கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்’ - பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: ‘கண் கெட்ட பின்​னர் சூரிய நமஸ்​காரம் செய்​வது​போல, தனது பதவிக்கு ஆபத்து வந்​தவுடன், தவறு செய்​தவர்​கள் திருந்தி வந்​தால் ஏற்​றுக் கொள்​வோம் என பழனி​சாமி சொல்​கிறார்” என முன்​னாள் அமைச்​சர் சி.வி சண்​முகம் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

சென்​னை​யில் உள்ள சி.​வி.சண்​முகத்தின் அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்ற ஆலோசனை​கூட்டத்தில் எஸ்​.பி.வேலுமணி, விஜய​பாஸ்​கர் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​டனர்.

பிறகு செய்​தி​யாளர்​களிடம் சி.​வி.சண்​முகம் கூறிய​தாவது: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பழனி​சாமி, அதி​முகவை ஒருங்​கிணைக்க மறுத்​த​தா​லும், வலிமை​யான கூட்​ட​ணியை அமைக்​காத காரணத்​தா​லும் தோற்​றோம்.

அப்​போதே தவெக​வுடன் கூட்​டணி அமைக்க வேண்​டும் என்​றோம். தவெக சார்​பாக​வும் கூட்​டணி அமைக்க பேசி​னார்​கள். ஆனால் கூட்​டணி பேச வந்​தவர்​களை பழனிசாமி உதாசீனப்​படுத்​தி​னார். தேமு​தி​க,கிருஷ்ண​சாமி உள்​ளிட்ட யாரை​யும் அரவணைக்​கவில்லை.

ஓபிஎஸ் தனக்கு எந்​தப் பொறுப்​பும் வேண்​டாம், அடிப்​படை உறுப்​பின​ராக இருக்​கிறேன் என்று கூறி​யும் அவரை சேர்த்​துக்​கொள்ள மறுத்​தார். இப்​போது பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘தவறு செய்​தவர்​கள் திருந்​திவந்​தால் ஏற்​றுக் கொள்​வோம்’ என சொல்​கிறார்.

கண் கெட்ட பின்​னர் சூரிய நமஸ்​காரம் செய்​வது போல, தனது பதவிக்கு ஆபத்து வந்​தவுடன் இது​போல பேசுகிறார். நாங்​கள் அதி​முக​வுக்கு துரோகம் செய்​து​விட்​டது​போல அறிக்கை வெளி​யிடு​கிறார்.

ஒருபக்​கம் பேசித் தீர்க்​கலாம் என சொல்​லி​விட்​டு, மறு​புறம் 31 மாவட்​டச் செய​லா​ளர்​களை பழனி​சாமி நீக்​கு​கிறார். பொதுக்​குழுவை கூட்ட கையெழுத்​துப் போட்​டால் உங்​கள் பதவி பறிக்​கப்​படும் என அச்​சுறுத்​தல் விடுக்​கிறார்.

பன்​னீர்​செல்​வம் - பழனி​சாமி தொடர்​பான வழக்​கில், ஜெயலலிதா இருந்​த​போது பொறுப்​பு​களில் இருந்​தவர்​களுக்கே கையெழுத்து போடும் அதி​காரம் என தீர்ப்பு வந்​தது.

அதே​போல, அதி​முக​வில் எங்​களுக்​கும், பழனி​சாமி தரப்​புக்​கும் மோதல் ஏற்​பட்ட மே 11-க்கு முன்பு யாரெல்​லாம் பொறுப்​பில் இருந்​தார்​களோ, அவர்​களே பதவி​யில் நீடிப்​பார்​கள்.

அதி​முக சட்​ட​வி​தி​களின்​படி 5-ல் 1 பங்கு பொதுக்​குழு உறுப்​பினர்​களின் கையெழுத்தை பெற்று பொதுச்​செய​லா​ளரிடம் கொடுத்​தால், பொதுக்​குழுவை 30 நாட்​களுக்​குள் கூட்​ட​வேண்​டும் என உள்​ளது. பொதுக்​குழுவை கூட்டி தேர்​தல் தோல்வி குறித்து வி​வா​திக்க வேண்​டும்.

பெரும்​பான்மை உறுப்​பினர்​கள் எதை ஏற்​றுக் கொள்கிறார்​களோ அதையே நாங்​களும் ஏற்​றுக்​கொள்​கிறோம். அனை​வரை​யும் ஒருங்​கிணைத்து அதி​முகவை வலிமை​யான இயக்​க​மாக்​க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

‘கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்’ - பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
அதிமுக தலைமை அலுவலகத்தில் பழனிசாமி ஆலோசனை: 80-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in