லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக துரை குமார் பொறுப்பேற்பு

டிஜிபிக்கள் வெங்கடராமன், டேவிட்சன் தேவாசிர்வாதம் விடுப்பில் சென்றனர்
துரை குமார்

துரை குமார்

Updated on
1 min read

சென்னை: தமிழக லஞ்ச ஒழிப்​புத் துறை ஐ.ஜி.​யாக உள்ள துரை குமாருக்​கு, அந்த துறை​யின் இயக்​குநர் பொறுப்பை கூடு​தலாக வழங்கி தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. இதையடுத்​து, அவர் பொறுப்​பேற்​றுக் கொண்​டார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பல்வேறு அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி நாமக்​கல், கரூர் உள்​ளிட்ட 8 மாவட்ட எஸ்​.பி.க்​கள் மாற்​றப்​பட்​டனர். மதுரை, தாம்​பரம் காவல் ஆணை​யர்​கள் உட்பட மேலும் சில காவல் துறை அதி​காரி​களும் மாற்​றப்​பட்​டனர். அந்த இடத்​துக்கு புதிய அதி​காரி​கள் உடனடி​யாக நியமிக்​கப்​பட்​டனர். தமிழக காவல் துறை​யின் சட்​டம் - ஒழுங்கு டிஜிபி​யாக (பொறுப்​பு) இருந்த வெங்​கட​ராமன் மாற்​றப்​பட்​டு, அவருக்கு பதிலாக, சந்​தீப் ராய் ரத்​தோர் நியமிக்​கப்​பட்​டார்.

சேலம், தூத்​துக்​குடி மாவட்​டத்​துக்கு புதிய ஆட்​சி​யர்​கள் நியமிக்​கப்​பட்​டனர். தலை​மைச் செயலர், சென்னை காவல் ஆணை​யரும் புதி​தாக நியமிக்​கப்​பட்​டனர். தமிழக உள்​துறைச் செயலர் தீரஜ்கு​மாருக்கு பதிலாக, சுற்​றுலா, பண்​பாடு, அறநிலை​யத் துறைச் செயல​ராக இருந்த மணி​வாசன் பணி​யமர்த்​தப்​பட்​டார். இதற்​கிடையே, ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்​புத் துறை (லஞ்ச ஒழிப்​புத் துறை) இயக்​குந​ராக இருந்த டிஜிபி டேவிட்​சன் தேவாசிர்​வாதம் மாற்​றப்​பட்​டார்.

அந்த இடத்​துக்கு சைபர் க்ரைம் டிஜிபி சந்​தீப் மிட்​டல் நியமிக்​கப்​பட்​டார். இதற்கு திமுக எதிர்ப்பு தெரி​வித்​தது. இதையடுத்​து, டேவிட்​சன் தேவாசிர்​வாதம் கூடு​தலாக கவனித்து வந்த ஆயுதப்​படை டிஜிபி பொறுப்பை மட்​டும் சந்​தீப் மிட்​டலுக்கு வழங்கி தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டது. ஆனால், லஞ்ச ஒழிப்​புத் துறை இயக்​குநர் யார் என்று உத்​தர​வில் குறிப்​பிடப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில், தேர்​தல் ஆணை​யம் நேற்று முன்​தினம் இரவு ஒரு உத்​தரவு கடிதத்தை வெளி​யிட்​டது. அதில், ‘லஞ்ச ஒழிப்​புத் துறை​யில் ஐ.ஜி.​யாக உள்ள துரை குமாருக்​கு, லஞ்ச ஒழிப்​புத் துறை இயக்​குநர் பொறுப்பு கூடு​தலாக வழங்​கப்​பட்​டுள்​ளது’ என கூறப்​பட்​டிருந்​தது. இதையடுத்​து, துரை குமார் அந்த பொறுப்பை ஏற்​றுக் கொண்​டார். இந்த சூழலில், புதிய பணி​யிடம் வழங்​கப்​ப​டாத டிஜிபிக்​கள் வெங்​கட​ராமன், டேவிட்​சன் தேவாசிர்​வாதம் உள்​ளிட்ட மேலும் சில காவல் துறை உயர் அதி​காரி​கள் விடுப்​பில்​ சென்​றுள்​ள​தாக தகவல்​ வெளி​யாகியுள்​ளது.

<div class="paragraphs"><p>துரை குமார்</p></div>
“கொள்கையற்ற கூட்டத்தை விரட்டியடிக்க வேண்டும்” - பரமக்குடியில் ஸ்டாலின் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in