இளம் வாக்காளர்களுக்கு இரட்டை வாக்காளர் அட்டை: எதைக் கொண்டு வாக்களிப்பது என தெரியாமல் குழப்பம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் தேர்​தல் அலு​வலர்​களின் அலட்​சி​யத்​தால் சென்னை உள்​ளிட்ட பல மாவட்​டங்​களில் புதி​தாக பெயர் சேர்த்த இளம் வாக்​காளர்​களுக்​கு, வெவ்​வேறு வாக்​காளர் எண்​ணில் இரு அடை​யாள அட்​டைகள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

இதனால், அவர்​கள் குழப்​பம் அடைந்​தனர். தமிழகத்​தில் கடந்த ஆண்டு நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை எஸ்​ஐஆர் கணக்​கெடுப்பு பணி​கள் நடத்​தப்​பட்டது.பிப்​.23-ம் தேதி வெளி​யான இறுதி வாக்​காளர் பட்​டியலின்படி 5.67 கோடி பேர் இருந்தனர்.

மொத்த வாக்காளர்களில் 18 முதல் 19 வயதுக்கு உட்​பட்ட வாக்​காளர்​களின் எண்​ணிக்கை 12.51 லட்​ச​மாக இருந்​தது. அதன் பிறகு, தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வேட்​புமனு தாக்​கலுக்கு 10 நாட்​கள் முன்பு வரை வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க அனு​ம​திக்​கப்​பட்​டது.

இதனால், மொத்த வாக்​காளர் எண்​ணிக்கை 5.73 கோடி​யாக உயர்ந்​தது. இதில் 18 வயது இளம் ​வாக்​காளர் எண்​ணிக்கை மட்​டும் 14.59 லட்​சம் ஆனது. 18 வயது நிறைவடைந்​தவர்​கள் பெயர் சேர்க்க தொடர்ந்து விண்​ணப்​பித்திருந்​தனர்.

இவர்​களில் சிலருக்கு ஒரே தொகு​தி​யில், ஒரே பாகத்​தில், ஒரே வாக்​குச்​சாவடி​யில் வெவ்​வேறு எண்​களில் பெயர் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதனால் வீட்​டுக்கு இரு வாக்​காளர் அட்​டைகள் வந்​துள்​ளன.

பூத் சிலிப்​பும் இரண்​டாக கொடுக்​கப்​பட்​டுள்​ளன. குறிப்​பாக சென்​னை​யில் இது​போன்ற குளறு​படிகள் அதி​மாக நிகழ்ந்​துள்​ளன. சில பிஎல்​ஓக்​கள், ஒரு நபருக்கு இரு பூத்சிலிப்​பு​களை​யும் கொடுத்​துச் சென்​றுள்​ளனர்.

ஒருசிலர் இரண்​டில் ஒரு பூத் சிலிப்பை திரும்ப பெற்​றுக் கொண்​டனர். அதே​நேரம் இரு பூத் சிலிப்​பு​கள் மற்​றும் இரு வாக்​காளர் அட்​டைகளை வைத்​திருந்த இளம் வாக்​காளர்​கள் எதை பயன்​படுத்​து​வது எனத் தெரி​யாமல் குழம்​பிப் போயினர்.

இதுதொடர்​பாக சென்​னை, வில்​லி​வாக்​கம் தொகு​தி​யைச் சேர்ந்த பெற்​றோர் சிலர் கூறும்​போது, “இது​போன்ற இரட்டை பதிவு​களை நீக்​கு​கிறோம் என்று சொல்​லித்​தானே எஸ்​ஐஆர் நடத்தப்​பட்​டது.

அதன் பிறகும் இரட்டை பதிவு செய்​வதை என்​ன வென்று சொல்​வது” என்​றனர். மேலும், சென்னை அயனாவரம் பகு​தி​யில் பெயர் சேர்க்க ஒரு​வர் புகைப்​படத்​துடன் கூடிய பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்ப படிவத்தை வழங்​கி​யுள்​ளார்.

அந்த படிவத்தை அப்​படியே ஸ்கேன் செய்து புகைப்​பட​மாக வாக்​காளர் அட்​டை​யில் இடம் ​பெறச் செய்​துள்​ளனர். இதனால் வாக்​காளர் புகைப்​படம் தெளி​வில்​லாமல் உள்​ளது. இதுகுறித்து தேர்​தல் அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “அது தொடர்​பாக ஆய்​வு செய்​து உரிய தீர்​வு காணப்​படும்​” என்​றனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
நாங்குநேரி அருகே இரட்டை கொலை நடந்த பெரும்பத்து, வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in