“200 தொகுதிகளுக்கும் அதிகமாக வெல்வோம்” - பொங்கல் விழாவில் ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை கொளத்​தூர் தொகுதியில் நேற்று நடந்த பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலினுடன் பெண்கள் ஆர்வமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

சென்னை கொளத்​தூர் தொகுதியில் நேற்று நடந்த பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலினுடன் பெண்கள் ஆர்வமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

Updated on
1 min read

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 200 தொகு​தி​களுக்​கும் அதி​க​மான இடங்​களில் வெற்றி பெறு​வோம் என்ற நம்​பிக்கை இருப்​ப​தாக பொங்​கல் விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நம்​பிக்கை தெரி​வித்​தார்.

சென்னை கொளத்​தூர் தொகுதி சட்​டப்​பேரவை உறுப்​பினர் அலு​வல​கம் அரு​கில் நேற்று காலை நடை​பெற்ற பொங்​கல் விழா​வில், முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், மனைவி துர்​கா​வுடன் பங்​கேற்​றார். அதன்​பின், பெரம்​பூர் டான்​பாஸ்கோ பள்ளி வளாகத்​தில் நடை​பெற்ற பொங்​கல் விழா​வில் அனிதா அச்​சீவர்ஸ் அகாட​மி​யின் 3,725 மாணவ, மாண​வியருக்கு பொங்​கல் பரிசுகளை வழங்​கி​னார்.

தொடர்ந்து புளியந்​தோப்பு டான்​பாஸ்கோ பாலிடெக்​னிக் கல்​லூரி வளாகத்​தில் நடை​பெற்ற பொங்​கல் விழா​வில், 1300 தூய்மை பணி​யாளர்​களுக்கு பொங்​கல் பரிசு வழங்​கியதுடன், அவர்​களுக்கு உணவு பரி​மாறி​னார்.

முன்​ன​தாக, பெரம்​பூரில் கட்​சி​யினர் பங்​கேற்ற பொங்​கல் விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: கொளத்​தூர் தொகு​தி​யில் ஒரு நிகழ்ச்சி நடை​பெறுகிறது என்​றால், அதில் ஒரு வேக​மும், ஒரு எனர்​ஜி​யும் எனக்கு வந்​து​விடு​கிறது. அந்த எனர்​ஜி​யுடன் தான் நான் உங்​கள் முன்​னால் நின்​று​கொண்​டிருக்​கிறேன்.

திரா​விட மாடல் அரசு பொறுப்​பேற்று நான்​கரை ஆண்டு காலத்​தில் என்​னென்ன திட்​டங்​களை​யெல்​லாம் செய்​திருக்​கிறது, என்​னென்ன சாதனை​களை​யெல்​லாம் புரிந்​திருக்​கிறது என்​பது உங்​களுக்கு நான் எடுத்​துச் சொல்ல வேண்​டிய அவசி​யம் இல்​லை. ஆனால், திமுக​வினர் இதை மக்​களிடத்​தில் எடுத்​துச் சொல்ல வேண்​டும். அதற்​காகத்​தான் இந்த பொங்​கல் விழா. ஏற்​கெனவே நீங்​கள் தேர்​தல் களத்​தில் ஆற்​றவேண்​டிய பணி​களில் 50 சதவீதம் முடித்​து​விட்​டீர்​கள். இன்​னும் 50 சதவீதம் தான் மீதம் இருக்​கிறது.

இன்று பல்​வேறு கட்​சிகளை சார்ந்​தவர்​கள். ஏன், பாஜக​வினர் கூட, திமுக-​காரர்​கள் போன்று யாராலும் வேலை செய்ய முடி​யாது என்று சொல்​கின்​ற​னர்.

கடந்த 1967-ல் அண்ணா தலை​மை​யில் ஆட்சி அமைந்​த​போது, அன்று முன்​னாள் முதல்​வர் பக்​தவச்​சலம் பத்​திரி​கை​யாளர்​களிடம் “தி​முக-​காரன் ஒரு சிங்​கிள் டீயை குடித்​து​விட்டு பம்​பர​மாக வேலை செய்​வான். அதற்கு நாமெல்​லாம் ஈடாக முடி​யாது” என்று வெளிப்​படை​யாகவே சொன்​னார்.

அதே உணர்​வோடு இன்​றைக்​கும் நான் பார்க்​கிறேன். நீங்​கள் ஆற்​றக்​கூடிய பணி​கள், ஏதோ கொளத்​தூர் தொகு​தி​யில் மட்​டுமல்ல. ஒட்​டுமொத்​த​மாக தமி​ழ​கத்​தில் இருக்​கக்​கூடிய திமுகவைச் சார்ந்​தவர்​கள் நம்​முடைய செயல் வீரர்​கள் ஆற்​றும் அந்​தப் பணி​களை​யெல்​லாம் பார்க்​கும் போது 200 தொகு​தி​களுக்கு குறை​யாமல் வெற்றி பெறு​வோம்.

நம்​முடைய கூட்​டணி நிச்​சய​மாக வெற்​றி​பெறும் என்று நான் ஏற்​கெனவே சொல்​லி​யிருந்​தேன். ஆனால், நாம் இப்​போது ஆற்​றி​யிருக்​கும் பணி​களை​யெல்​லாம் பார்க்​கின்​ற​போது 200 தொகு​தி​களுக்​கும் அதி​க​மான இடங்​களில் பெறு​வோம் என்ற நம்​பிக்கை எனக்கு வந்​திருக்​கிறது.

இந்த நேரத்​தில் உங்​கள் அத்​தனை பேருக்​கும் என்​னுடைய பொங்​கல் வாழ்த்​துகளைத் தெரி​வித்து வரவிருக்​கும் தேர்​தலில் ஒரு மாபெரும் வெற்றி பெறு​வதற்கு உறு​தி​யெடுப்​போம், சபதம் எடுப்​போம். இவ்​வாறு அவர் பேசி​னார்​.

<div class="paragraphs"><p>சென்னை கொளத்​தூர் தொகுதியில் நேற்று நடந்த பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலினுடன் பெண்கள் ஆர்வமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.</p></div>
“அண்ணாவை பார்த்து யாரும் பயப்படவில்லை” - ‘பராசக்தி’ குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in