

தி.நகர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா அன்பழகனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
சென்னை: தி.நகர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன், நேற்று பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது தொகுதியில் தான் செயல்படுத்த திட்டமிட்டுள்ள 10 அம்ச திட்டம் குறித்து அவர் கூறியதாவது: தி.நகர் பகுதியில் உள்ள பழைய குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.
நடைபாதை வியாபாரிகளுக்கு மாநகராட்சி மூலம் கடைகள் முறைப்படுத்தி வழங்கப்படும். போக்குவரத்து நெரிசல் மிக்க தி.நகரில் நவீன முறையில் 2 மற்றும் 4 வாகன காப்பக வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சோமசுந்தரம் பாரதி நகர், ராஜாங்கம் மத்திய வீதி, உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், வீட்டுமனைப் பட்டா வழங்க நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க ஏற்பாடு செய்வேன் என்றார்.