வாக்கு எண்ணும் மையத்தில் திமுக முகவர் உயிரிழப்பு

பாஸ்​கர்

பாஸ்​கர்

Updated on
1 min read

திரு​வள்​ளூர்: திரு​வள்​ளூர் அருகே செவ்​வாப்​பேட்டை வாக்கு எண்​ணும் மையத்​தில் திமுக முகவர் மாரடைப்​பால் உயி​ரிழந்த சம்​பவம், அரசி​யல் கட்​சி​யினர் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​உள்​ளது.

திரு​வள்​ளூர் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் திமுக சார்​பில் வி.ஜி.​ராஜேந்​திரன் போட்​டி​யிடு​கிறார்.

இந்​நிலை​யில் திமுக முகவரும், திமுக​வின் பூண்டி மேற்கு ஒன்​றிய அவைத் தலை​வரு​மான பட்​டரைப்​பெரும்​புதூரைச் சேர்ந்த பாஸ்​கர் (57) நேற்று காலை செவ்​வாப்​பேட்டை அரசு தொழில்​நுட்​பக் கல்​லூரி​யில் உள்ள திரு​வள்​ளூர் தொகு​திக்​கான வாக்கு எண்​ணும் மையத்​துக்கு வந்​தார்.

வாக்கு எண்​ணிக்கை தொடங்​கும் முன்பு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்​பட்​டது. இதையடுத்​து, 108 ஆம்​புலன்ஸ் மூலம் சிகிச்​சைக்​காக திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டார்.

அங்கு மருத்​து​வர்​களின் பரிசோதனை​யில், மருத்​து​வ​மனைக்கு வரும் வழி​யிலேயே பாஸ்​கர் உயி​ரிழந்​தது தெரிய வந்​தது. இதுகுறித்​து, செவ்​வாப்​பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்​றனர்​.

<div class="paragraphs"><p>பாஸ்​கர்</p></div>
ஃபீனிக்ஸ் பறவை போல் அதிமுக மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும்: பழனிசாமி நம்பிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in