உதயநிதி வேட்புமனுவில் சொத்து விவரம் முரண்பாடு: வருமான வரித்துறை விசாரிக்க கோரி வழக்கு

உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
உதயநிதி வேட்புமனுவில் சொத்து விவரம் முரண்பாடு: வருமான வரித்துறை விசாரிக்க கோரி வழக்கு
Updated on
1 min read

சென்னை: சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகுதியில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் 2-வது முறையாகப் போட்​டி​யிடு​கிறார்.

இந்​நிலை​யில், உதயநிதி தற்​போது தாக்​கல் செய்​துள்ள வேட்​புமனு​வில் குறிப்​பிட்​டுள்ள சொத்து விவரங்​களுக்​கும், 2021-ல் தாக்​கல் செய்​திருந்த வேட்​புமனு​வில் உள்ள சொத்து விவரங்​களுக்​கும் முரண்​பாடு​ இருப்​ப​தாகக்​கூறி சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகுதி வாக்​காள​ரான குமார​வேல் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தி்ல வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் தாக்​கல் செய்​துள்ள மனு​: உதயநிதி ஸ்டா​லின் 2021-ல் தாக்​கல் செய்​திருந்த வேட்​பு மனு​வில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறு​வனத்​தில் ரூ.7.36 கோடி முதலீடு செய்​திருந்​த​தாக குறிப்​பிட்டு இருந்​தார். ஆனால், தற்​போதைய தேர்​தல் மனு​வில் அந்த விவரங்​கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்​கப்​பட​வில்​லை. மாறாக, அவரது மனைவி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறு​வனத்​தில் ரூ. 2.63 கோடி முதலீடு செய்​துள்​ள​தாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இந்த பரிவர்த்​தனை தொடர்​பாக முறை​யான விளக்​கங்​கள் வேட்​புமனு​வில் தெரிவிக்​கவில்​லை. கடந்த 2021-ல் தாக்​கல் செய்​திருந்த வேட்​புமனு​வில் உதயநிதி ரூ. 11.6 கோடி ஸ்னோ ஹவுஸிங் என்ற நிறு​வனத்​துக்கு கடன்கொடுத்​துள்​ள​தாக கூறி​யுள்ளார். ஆனால், தற்​போது ரூ. 10 கோடி கடன் கொடுத்​துள்​ள​தாக குறிப்​பிட்​டுள்​ளார். எஞ்​சிய ரூ. 1 கோடியே 6 லட்​சம் பணம் திருப்பி செலுத்​தப்​பட்டு வி்ட்​டதா என்ற விவர​மும் தெரி​விக்​கப்​பட​வில்​லை.

2020-ம் ஆண்​டுக்கு முன்​பாக தனக்கு ரூ. 2 கோடி அளவுக்கு வரு​மானம் உள்​ள​தாக குறிப்​பிட்​டுள்ள உதயநிதி, தற்​போது ரூ. 10.98 கோடி அளவுக்கு வரு​மானம் உயர்ந்​துள்​ள​தாக தெரி​வித்​துள்​ளார். வரு​மானம் மற்​றும் சொத்து அதி​கரிப்​புக்கு உரிய விளக்​கம் அளிக்​கப்​பட​வில்​லை. தனக்​குள்ள சொத்​துகள் குறித்து முரண்​பா​டான தகவல்​களை வேட்​பாளர்​கள் வேட்​புமனு​வில் தெரி​விப்​பது மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்​டத்​துக்கு எதி​ரானது.

எனவே, இதுதொடர்​பாக விசா​ரணை நடத்​தும்​படி வருமான வரித்​துறை​யின் புல​னாய்வு அமைப்​புக்​கும், மத்​திய கம்​பெனிகள் விவ​காரத் துறைக்​கும் உத்​தர​விட வேண்​டும்.இவ்​வாறு மனு​வில் கோரி​யுள்​ளார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அமர்​வில் இன்று (ஏப்​.15) விசா​ரணைக்கு வரவுள்​ளது.

உதயநிதி வேட்புமனுவில் சொத்து விவரம் முரண்பாடு: வருமான வரித்துறை விசாரிக்க கோரி வழக்கு
“இந்த ஆபத்தை முன்னரே கணித்தவர் ஸ்டாலின்” - தொகுதி மறுவரையறை குறித்து ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in