வடபழனி காவேரி மருத்துவமனையில் செரிமான மண்டல அறிவியல் மையம் தொடக்கம்

வடபழனி காவேரி மருத்துவமனையில் செரிமான மண்டல அறிவியல் மையம் தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: வடபழனி​யில் உள்ள காவேரி மருத்துவமனையில், செரி​மானக் கோளாறுகள் தொடர்பான இரைப்​பை, குடல் மற்​றும் கல்​லீரல் சார்ந்த அனைத்து நோய்​களுக்​கும் ஒரே இடத்​தில் தீர்வு வழங்​கும் வகை​யில், அதிநவீன தொழில்​நுட்ப வசதி​களு​டன் கூடிய `செரி​மான மண்டல அறி​வியல் மையம்' தொடங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த பிரத்​யேக சிகிச்​சைப் பிரிவை காவேரி மருத்துவமனை​யின் இணை நிறு​வனர் மருத்​து​வர்அரவிந்​தன் செல்​வ​ராஜ் மற்​றும் இம்​மை​யத்​தின் இயக்​குநர் பாண்​டுரங்​கன் பாசுமணி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்​தனர்.

அப்​போது மருத்​து​வர் அரவிந்​தன் செல்​வ​ராஜ் பேசுகை​யில், ``நிஜ உலக சூழலில் மக்​கள் எதிர்​கொள்​ளும் சுகா​தார சவால்​களுக்கு தீர்வு வழங்​கும் நோக்​கத்​தோடு, சிறப்பு சிகிச்சை மையங்​களை​யும், பிரிவு​களை​யும் உரு​வாக்​கு​வதை காவேரி மருத்துவமனை குழு​மம் தொடர்ந்து செய்து வரு​கிறது.

அந்த வகை​யில் செரி​மான கோளாறுகளு​டன் வாழும் நோயாளி​களின் சிகிச்சை தரத்​தை​யும், வாழ்க்கை முறையை​யும் மேம்​படுத்த இந்த மையம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது'' என்று தெரி​வித்​தார்.

பின்​னர் மருத்​து​வர் பாண்​டுரங்​கன் பாசுமணி கூறிய​தாவது: வாழ்​வியல் மாற்​றங்​களால் செரி​மானப் பிரச்​சினை​கள் தொடர்ந்து அதி​கரித்து வரு​கின்​றன. இரவு நேரத்​தில் தாமத​மாக உண்​பது, போதிய தூக்​கமின்​மை, உடல் பரு​மன் மற்​றும் முறை​யான உடற்​ப​யிற்சி இல்​லாதது போன்ற காரணங்​களால் ஏற்​படும் அசிடிட்டி மற்​றும் நெஞ்சு எரிச்​சல் ஆகிய​வற்​றால் செரி​மானக் கோளாறுகள் தொடர்ந்து பரவலாக இருக்​கின்​றன.

வழக்​க​மான நடை​முறை​யில் நோயாளி​கள் ஒவ்​வொரு துறை மருத்​து​வரை தேடிச் செல்ல வேண்​டி​யிருக்​கும். ஆனால் இங்கு நோயாளி​களுக்​காக பல்​வேறு துறை நிபுணர்​கள் ஒன்​று கூடி ஆலோ​சித்​து, ஒருங்​கிணைந்த தீர்வை வழங்​கு​வார்​கள்.

சாதாரண செரி​மானக் கோளாறு முதல் புற்​று​நோய் பாதிப்பு வரை அனைத்​துக்​கும் இந்த மையம் ஒரு தீர்​வாக அமை​யும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்​நிகழ்​வில் காவேரி மருத்​து​வ​மனை​யின் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் சதீஷ்கு​மார் ஆனந்தன், இரைப்பை குடலியல் மருத்​து​வர்​கள் எம்​.ஏ.அர​விந்த், டி.கே.ஆனந்த், கல்​லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்வாதி ராஜூ, மருத்​துவ இயக்​குநர் ஐயப்​பன் பொன்​னு​சாமி, ஊடுரு​வல் எண்​டோஸ்​கோபி நிபுணர்​ டி.தென்​னரசு உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

வடபழனி காவேரி மருத்துவமனையில் செரிமான மண்டல அறிவியல் மையம் தொடக்கம்
பி.ஆர்.பாண்டியன், செல்வராஜுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in