வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட 25 காவல் அதிகாரிகளுக்கு திருநெல்வேலி சரக டிஐஜி சரவணன் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: 25 காவல் அதிகாரிகளுக்கு டிஐஜி பாராட்டு
தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே 17 வயது பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீஸார் 10 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி, இந்த கொலையில் தொடர்புடைய நபரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட 25 காவல் அதிகாரிகளுக்கு திருநெல்வேலி சரக டிஐஜி சரவணன் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
காவல் ஆய்வாளர்கள் விளாத்திகுளம் சக்திவேல், உமா மகேஸ்வரி, சங்கரலிங்க புரம் அசோக்பாபு, புதூர் ராஜேஷ், தூத்துக்குடி காசிபாண்டியன், முறப்பநாடு ஹரிஹரன், கோவில்பட்டி மேற்கு நவநீதகிருஷ்ணன், தருவைகுளம் சைரஸ், சைபர் குற்றப்பிரிவு சாந்தி, ஆறுமுகநேரி திலீபன், மாசார்பட்டி பவுல் ஏசுதாசன், உதவி ஆய்வாளர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைராஜபிரபு, மணிமாறன், கோவில் பட்டி மேற்கு சண்முகம், விளாத்திகுளம் மாதவராஜா, நாலாட்டின் புதூர் சுந்தர், சிப்காட் பெபின் செல்வ பிரிட்டோ, ஸ்ரீவைகுண்டம் செந்தில்குமார், முறப்பநாடு சுப்புராஜ், ஆறுமுகநேரி முத்து ராஜா, ஆழ்வார்திருநகரி பாலன், தூத்துக்குடி தென்பாகம் காவுராஜன், சைபர் குற்றப்பிரிவு சுதாக ரன், அச்சுதன், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகிய 25 காவல் அதிகாரிகளும் பாராட்டப்பட்டனர்.
