பொதுமக்கள் புகார் தீர்வுக்கு புதிய வழி; இனி வாரம் 2 நாள் குறைதீர் முகாம்: டிஜிபி உத்தரவு

டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்

டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்

Updated on
1 min read

சென்னை: இனி வாரம் 2 நாள் பொது மக்​கள் குறைதீர் முகாம்​களை நடத்த வேண்​டும் என அனைத்து மாவட்ட போலீஸ் அதி​காரி​களுக்​கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்.

அந்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: பொது​மக்​களின் புகார்​கள் மற்​றும் குறை​களுக்கு விரை​வாக​வும், திறம்​பட​வும் தீர்வு காண வேண்​டும். அதை உறுதி செய்​யும் பொருட்டு வாரந்​தோறும் புதன் மற்​றும் சனிக்​கிழமை ஆகிய 2 நாட்​களில் பகல் 11 மணி முதல் பிற்​பகல் 1 மணி வரை​யில் பொது​மக்​களை சந்​தித்​து, அவர்​களின் குறை​களை கேட்க வேண்​டும். இந்த 2 நாட்​களும் மக்​களின் குறைதீர்ப்பு நாட்​களாக கருதப்​படும்.

டிஎஸ்​பி-கள், எஸ்​பி-க்​கள், டிஐஜி-க்​கள், மற்​றும் ஐஜி-க்​கள், அந்​தந்த காவல் ஆணை​யர்​கள் ஆகியோர் குறிப்​பிட்ட மேற்​கண்ட நேரத்​தில் தங்​களது அலு​வல​கங்​களில் இருந்து பொது​மக்​களை சந்​தித்து அவர்​களது குறை​களை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். பொது​மக்​களிடம் கண்​ணி​ய​மாக நடந்து கொள்ள வேண்​டும்.

அவர்​கள் சொல்​லும் குறை​களை கேட்டு குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்​குள் உடனுக்​குடன் தீர்வு காண வேண்​டும். சம்​பந்​தப்​பட்ட உயர் அதி​காரி​கள் நீதி​மன்ற அலு​வல், கூட்​டங்​களில் பங்​கேற்​றல், சட்​டம்- ஒழுங்கு பாது​காப்பு பணி​களை மேற்​கொள்​ளுதல் போன்ற பணி​கள் இருந்​தால் பொது​மக்​களை நீண்ட நேரம் காக்கவைக்​காமல் தங்​களுக்கு அடுத்​தபடி​யான அதி​காரி மூலம் பொது​மக்​களிடம் குறை​களை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். இதுதொடர்​பாக அதி​காரி​களின் செயல்​பாடு​கள் காவல்​துறை தலைமை அலு​வல​கத்​தால் கண்​காணிக்​கப்​படும். இவ்​வாறு அந்த உத்​தர​வில் டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் தெரி​வித்​துள்​ளார்.

<div class="paragraphs"><p>டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்</p></div>
நடிகை த்ரிஷா பகிர்ந்த முதல்வர் விஜய் பிறந்தநாள் ‘க்ளிக்’ வைரல்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in