சபரிமலையில் ஐயப்ப சுவாமி முத்திரையிட்ட தபால்களை வாங்க பக்தர்கள் ஆர்வம்

சபரிமலை அஞ்சல் நிலையத்தில் தபாலை உறவினருக்கு அனுப்பும் பக்தர்.  (உள்படம்) ஐயப்ப சுவாமி உருவத்துடன் கூடிய அஞ்சல் முத்திரை.

சபரிமலை அஞ்சல் நிலையத்தில் தபாலை உறவினருக்கு அனுப்பும் பக்தர். (உள்படம்) ஐயப்ப சுவாமி உருவத்துடன் கூடிய அஞ்சல் முத்திரை.

Updated on
1 min read

குமுளி: சபரிமலை அடி​வாரம் பம்பை நதிக்​கரை​யில் சபரிமலைக்​கான கிளை அஞ்​சல் நிலை​யம் செயல்​பட்டு வரு​கிறது. வனப் பகு​தி​யான இங்கு கோயில் திறக்​கப்​படும் நாட்​களில் மட்​டுமே இந்த அஞ்​சல் நிலை​யம் செயல்​படும். இதற்​கென பிரத்​யேக அஞ்​சல் குறி​யீட்டு எண் (689 713) ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

தற்​போது மண்டல பூஜை வழி​பாடு தொடங்​கி​யுள்ள நிலை​யில் இந்த அஞ்​சல​க​மும் செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ளது. இங்கு விற்​பனை செய்​யப்​படும் அஞ்​சல் அட்​டை, உள்​நாட்டு தபால், அஞ்​சல் உறை போன்​றவற்​றில் ஐயப்ப சுவாமி உரு​வம் ‘போஸ்ட் மார்க்’ எனும் முத்​திரை குத்​தப்​பட்டு வழங்​கப்​படு​கிறது.

அதில், யோகநிலை​யில் அமர்ந்த ஐயப்​பனின் உரு​வம் 18 படிகளு​டன் உள்​ளது. மண்​டல, மகர வழி​பாட்​டுக் காலங்​களில்​தான் இவற்​றைப் பெற முடி​யும் என்​ப​தால், பக்​தர்​கள் பலரும் தபாலை ஆர்​வத்​துடன் வாங்​கி, உறவினர்​களுக்​கு அனுப்​பு​கின்​றனர்.

இதுகுறித்து நிலைய அஞ்​சல் அதி​காரி ஷிபு வி.​நாயர் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் குடியரசுத் தலை​வர் மற்​றும் சபரிமலை ஐயப்​பனுக்கு மட்​டுமே பிரத்​யேக அஞ்​சல் குறி​யீட்டு எண் வழங்​கப்​பட்​டுள்​ளது.

பணப் பரிவர்த்​தனை​கள், பிர​சாத பார்​சல் புக்​கிங், மொபைல் ரீசார்ஜ் உள்​ளிட்ட வசதி​யும் இங்கு உள்​ளது. கோயில் நடை திறக்​கப்​பட்​ட​தில் இருந்து சுமார் ஆறா​யிரம் தபால் அட்​டைகள் விற்​பனை​யாகி​யுள்​ளன. மகர விளக்கு வழி​பாடு முடி​யும் வரை இந்த அஞ்​சல​கம் செயல்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>சபரிமலை அஞ்சல் நிலையத்தில் தபாலை உறவினருக்கு அனுப்பும் பக்தர்.  (உள்படம்) ஐயப்ப சுவாமி உருவத்துடன் கூடிய அஞ்சல் முத்திரை.</p></div>
வேலை இழந்த பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: டிஎன்பிஎஸ்சி-க்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in