சட்டவிரோதமாக மண் அள்ளிய டிராக்டர் பறிமுதலின்போது தேவிப்பட்டினம் தலைமை காவலர் விபத்தில் உயிரிழப்பு

குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்
விபத்தில் காயமடைந்தவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் வி.கே.ராஜீவ், ஆட்சியர் சிவகுரு பிரபாகரன். உள்படம்: மகேஷ்குமார்

விபத்தில் காயமடைந்தவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் வி.கே.ராஜீவ், ஆட்சியர் சிவகுரு பிரபாகரன். உள்படம்: மகேஷ்குமார்

Updated on
1 min read

ராமநாதபுரம்: தே​விப்பட்​டினம் அருகே சட்​ட​விரோத​மாக மணல் அள்​ளிய டிராக்​டரை பிடித்து காவல் நிலை​யம் கொண்டு சென்ற தலை​மைக் காவலர் விபத்​தில் சிக்கி உயி​ரிழந்​தார். அவரது குடும்​பத்​துக்கு இரங்​கல் தெரி​வித்​துள்ள முதல்​வர் விஜய் நிவாரண​மாக ரூ.30 லட்​சம் அறி​வித்​தார்.

ராம​நாத​புரம் மாவட்​டம் தேவிப்பட்​டினம் அருகே தேர்​போகி கிராமத்​தில் சட்​ட​விரோத​மாக சவுடு மண் அள்​ளப்​படு​வ​தாக கிடைத்த தகவலின் அடிப்​படை​யில், நேற்று அதி​காலை சார்பு ஆய்​வாளர் சுந்​தரமூர்த்தி தலை​மையி​லான போலீ​ஸார் ச‌‌ம்பவ இடத்​துக்​குச் சென்​றனர். அங்கு சட்​ட​விரோத​மாக மண் அள்ள பயன்​படுத்​தப்​பட்ட 3 டிராக்​டர்​கள், ஒரு பொக்​லைன் இயந்​திரம் ஆகிய​வற்றை கைப்​பற்​றினர். திருட்டு மண் அள்​ளிய தேர்​போகி, பழனிவலசை கிராமங்​களைச் சேர்ந்த கார்த்​திக் ராஜா உள்​ளிட்ட 4 பேரை கைது செய்​தனர்.

அதி​காலை 4 மணி​யள​வில் பறி​முதல் செய்த டிராக்​டரை தேவிப்​பட்​டினம் காவல் நிலைய தலை​மைக் காவலர் மகேஷ்குமார் ஓட்​டி வந்தார். அப்​போது, நாகர்​கோ​விலில் இருந்து வேளாங்​கண்ணி நோக்​கிச் சென்ற அரசு விரைவு பேருந்​து, டிராக்​டரின் பின்​பகு​தி​யில் மோதி​யது. இதில் டிராக்​டரும், பேருந்​தும் கவிழ்ந்து விபத்​துக்​குள்​ளானது. படு​காயமடைந்த தலை​மைக் காவலர் மகேஷ்கு​மார் (41) அதே இடத்​திலேயே உயி​ரிழந்​தார். அரசு பேருந்து ஓட்​டுநர் பட்​டு​ராஜா, நடத்​துநர் கிருஷ்ணா மற்​றும் பயணி​கள் 11 பேர் காயமடைந்​தனர். தேவிப்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

இந்தச் சம்​பவம் குறித்து முதல்​வர் விஜய் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், மகேஷ் கு​மாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், ரூ.30 லட்​சம் நிவாரணம் வழங்கி உத்​தர​விட்​டுள்​ளார்.இதனிடையே மகேஷ்கு​மாரின் கண்​களை குடும்பத்தினர் தான​மாக வழங்கினர். பின்​னர், அவரது உடலுக்கு அமைச்​சர் வி.கே.​ராஜீவ், டிஐஜி மணிவண்​ணன், ஆட்சி​யர் சிவகுரு பிர​பாகரன், எஸ்பி ஜி.சந்​தீஷ் ஆகியோர் மலர்​வளை​யம் வைத்து மரி​யாதை செலுத்​தினர். பின்​னர், 21 குண்​டு​கள் முழங்க காவல்​துறை மரி​யாதை​யுடன் உடல் தகனம் செய்​யப்​பட்​டது.

<div class="paragraphs"><p>விபத்தில் காயமடைந்தவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் வி.கே.ராஜீவ், ஆட்சியர் சிவகுரு பிரபாகரன். உள்படம்:&nbsp;மகேஷ்குமார்</p></div>
“அதிமுகவை பற்றி குறை சொல்வதற்கு சி.வி.சண்முகத்துக்கு எந்த தகுதியும் இல்லை” - அக்ரி கிருஷ்ணமூர்த்தி விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in