பிஹார் தொழிலாளிக்கு கை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவர்களுக்கு துணை முதல்வர் நேரில் பாராட்டு

விபத்தில் கைகளை இழந்த பிஹார் இளைஞருக்கு மறுசீரமைப்பு நுண் அறுவை சிகிச்சை செய்து ஒரு கையை செயல்பட வைத்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பெண் மருத்துவர்கள் குழுவினருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனை முதல்வர் டாக்டர் சாந்தாராமன், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை குழுவின் பேராசிரியர் டாக்டர் பி.ராஜேஸ்வரி உள்ளிட்டோர்.

விபத்தில் கைகளை இழந்த பிஹார் இளைஞருக்கு மறுசீரமைப்பு நுண் அறுவை சிகிச்சை செய்து ஒரு கையை செயல்பட வைத்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பெண் மருத்துவர்கள் குழுவினருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனை முதல்வர் டாக்டர் சாந்தாராமன், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை குழுவின் பேராசிரியர் டாக்டர் பி.ராஜேஸ்வரி உள்ளிட்டோர்.

Updated on
1 min read

சென்னை: பிஹார் தொழிலா​ளிக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்​றிகர​மாக கையை பொருத்​திய ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை மருத்​து​வர்​களை நேரில் அழைத்து துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பாராட்டினார்.

பிஹாரைச் சேர்ந்த 28 வயது தொழிலாளி கடந்த செப்​.26-ம் தேதி சென்னை பூங்கா ரயில் நிலை​யம் அருகே தண்​ட​வாளத்தை கடக்க முயன்​ற​போது விபத்​தில் சிக்​கி​னார்.

இந்த விபத்​தில் அவரது இடது கை தோள்​பட்​டையி​லிருந்து முழங்கை வரை மிக மோச​மாக சிதைந்​து​போனது. அதே​போல், வலது கை மணிக்​கட்டு பகு​திவரை சிதைந்​திருந்​தது. இதையடுத்து ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

இரண்டு கைகளும் சிதைந்​திருந்த நிலை​யில் அவருக்கு இடது கையில் மணிக்​கட்​டிலிருந்து கீழே உள்ள பகு​தியை வலது கையோடு இணைத்​து, கரங்​களை மாற்றி பொருத்​தும் அறுவை சிகிச்சை செய்​யப்​பட்​டது.

அந்த சிக்​கலான, சவால் மிகுந்த அறுவை சிகிச்​சையை ராஜீவ் காந்தி அரசு மருத்​து​வ​மனை​யின் ஒட்​டுறுப்பு அறுவை சிகிச்சை துறை தலை​வர் பி.​ராஜேஸ்​வரி தலை​மையி​லான குழு​வினர் மேற்​கொண்​டனர்.

சிகிச்​சை​யில் ரத்​தக் குழாய் மறுசீரமைப்பு முடிந்​தவுடனேயே இணைக்​கப்​பட்ட கை புத்​து​யிர் பெற்​றது. இந்த சவால் மிகுந்த அறுவை சிகிச்​சையை மேற்​கொண்ட மருத்​து​வர்​களை சென்னை முகாம் அலு​வல​கத்​துக்கு அழைத்து துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று பாராட்​டி​னார்.

இந்​நிகழ்​வில் சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை முதல்​வர் சாந்​தா​ராமன் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட பதி​வில், “சென்​னை​யில் பணி​யாற்றி வந்த பிஹார் தொழிலாளி எதிர்​பா​ராத​வித​மாக ரயில் விபத்​தில் சிக்கி கைகளை இழந்த நிலை​யில், அவருக்​கு, ராஜீவ்​காந்தி மருத்​து​வர்​கள் தொடர் சிகிச்சை அளித்து அவரின் இடது கையை வலது முழங்​கை​யுடன் இணைத்து சாதனை படைத்​துள்​ளனர்.

மிக அரி​தான கரங்​களை மாற்றி பொருத்​தும் அறுவை சிகிச்சை நமது நாட்​டில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் நிகழ்த்​தப்​பட்​டது இதுவே முதல்​முறை. இந்த அறுவை சிகிச்​சையை திறமை​யாக செய்த மருத்​து​வர்​களுக்கு பாராட்​டு​கள்” என்று தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>விபத்தில் கைகளை இழந்த பிஹார் இளைஞருக்கு மறுசீரமைப்பு நுண் அறுவை சிகிச்சை செய்து ஒரு கையை செயல்பட வைத்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பெண் மருத்துவர்கள் குழுவினருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனை முதல்வர் டாக்டர் சாந்தாராமன், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை குழுவின் பேராசிரியர் டாக்டர் பி.ராஜேஸ்வரி உள்ளிட்டோர்.</p></div>
சென்னை, புறநகரில் டிட்வா புயல் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் 900 தீயணைப்பு வீரர்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in