இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: இடைநிலை ஆசிரியர்​களின் கோரிக்​கைகளை உடனே நிறைவேற்ற வேண்​டும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்கை: பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை நடை​முறைப்​படுத்த வேண்​டும். இடைநிலை ஆசிரியர்​களின் ஊதிய முரண்​பாட்​டைக் களைய வேண்​டும். காலிபணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி டிட்​டோ-ஜாக் கூட்​டமைப்பு சார்​பில் சென்​னை​யில் உள்ள பள்​ளிக்​கல்வி இயக்​குநரகத்​தில் காத்​திருப்​புப் போராட்​டம் நடத்​தப்​போவ​தாக அறிவிக்​கப்​பட்​டது.

அதற்​கான நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டிருந்த சங்க நிர்​வாகி​களை வீட்​டுக் காவலில் வைத்​தனர். தடைகளை தாண்டி சிந்​தா​திரிப்​பேட்டை பகு​தி​யில் கூடிய ஆசிரியர்​களும் கைது செய்​யப்​பட்​டனர். பின்​னர், டிட்​டோ-ஜாக் உயர்​மட்​டக் குழு நிர்​வாகி​களு​டன் பள்​ளி​கல்​வித் துறைச் செயலர் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

அவர்​களது கோரிக்​கைகள் குறித்து அமைச்​சரிடம் தெரி​விப்​ப​தாக கூறிய நிலை​யில், 3 நாட்​களாகி​யும் போராட்​டக் குழு​விடம் அரசுத் தரப்​பில் எந்த பேச்​சு ​வார்த்​தை​யும் நடத்​த​வில்​லை. இதனால் வேலைநிறுத்​தம், ஆர்ப்​பாட்​டம் நடத்த உள்​ள​தாக டிட்​டோ-ஜாக் கூட்​டமைப்பு அறி​வித்​துள்​ளது.

பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை நடை​முறைப்​படுத்​து​வோம் என்​பது திமுக அரசின் தேர்​தல் வாக்​குறு​தி. அதை நிறைவேற்ற வேண்​டும் என்று ஆசிரியர்​கள், அரசு ஊழியர்​கள் போராடி வரு​கின்​றனர்.

அதே​போல, சம வேலைக்கு சம ஊதி​யம், தொடக்​கக் கல்​வி​யில் உள்ள 30 ஆயிரம் காலி பணி​யிடங்​களை நிரப்​புதல் உள்​ளிட்ட கோரிக்​கைகளை​யும் வலி​யுறுத்தி வரு​கின்​றனர். இந்த விவ​காரத்​தில் முதல்​வர் தலை​யிட்​டு, சங்க நிர்​வாகி​களை அழைத்​துப்பேசி, அவர்​களது கோரிக்​கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
கட்சியின் வாக்கு வங்கிக்காக நீதிபதியை பதவி நீக்க கோருவதா? - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in