

சென்னை: பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்தில் ஆன்லைன் வாயிலாக லட்சக் கணக்கானோர் இணைந்து வருகின்றனர். தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளும் இதில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், பாஜக மாநில செயலாளரும், அண்ணாமலையின் மிக நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவருமான அமர்பிரசாத் ரெட்டி, தனது எக்ஸ் தளப் பதிவில், ‘நாளை (இன்று) மதியம் 12 மணிக்கு, எனது முடிவையும் எண்ணங்களையும் சமூக வலைதளங்கள் மூலம் பொது மக்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்,’ என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அவர் பாஜகவில் இருந்து விலகுவார் என அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.