எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி: விரைவு ரயில்களை மீண்டும் தாம்பரத்தில் இருந்து இயக்க முடிவு

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி: விரைவு ரயில்களை மீண்டும் தாம்பரத்தில் இருந்து இயக்க முடிவு
Updated on
1 min read

சென்னை: எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரண​மாக, விரைவு ரயில்​களை மீண்​டும் தாம்​பரத்​தில் இருந்து இயக்க ரயில்வே நிர்​வாகம் முடிவு செய்​துள்​ளது.

சென்னை, எழும்​பூர் ரயில் நிலை​யத்தை உலகத் தரத்​துக்கு மேம்​படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்​தது. அதன்​படி, மறுசீரமைப்பு பணி ரூ.734.91 கோடி​யில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் தொடங்கி நடை​பெறுகிறது.

இதன் ஒரு பகு​தி​யாக, எழும்​பூர் ரயில் நிலை​யத்​தின் முதல் 5 நடை மேடைகளை அகலப்​படுத்தி நவீனப்​படுத்​தும் பணி​களுக்​காக, தாம்​பரம் நிலை​யத்​துக்கு விரைவு ரயில்​கள் மாற்​றம் கடந்த ஆண்டு ஜூனில் தொடங்​கியது. இதன் தொடர்ச்​சி​யாக, கடந்த ஆண்டு செப்​டம்​பர், டிசம்​பரில் அடுத்​தடுத்த கட்​டங்​களாக மற்ற விரைவு ரயில்​களும் தாம்​பரம் முனை​யத்​துக்கு மாற்​றப்​பட்​டன.

இதன்​பிறகு, ரயில் நிலை​யத்​தின் 1-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரை இணைக்​கும் வகை​யில் பிரம்​மாண்ட நடைமேம்​பாலம் அமைக்க முதல்​கட்ட பணி​கள் நடப்​பாண்​டில் பிப்​ர​வரி​யில் தொடங்​கியது.

இதையடுத்​து, உழவன், அனந்​த​புரி, ராமேஸ்​வரம் போன்ற சில முக்​கிய விரைவு ரயில்​கள் பிப்​.3-ம் தேதி முதல் ஏப்​.4-ம் தேதி வரை தாம்​பரம் நிலை​யத்​துக்கு தற்​காலிக​மாக மாற்​றப்​பட்டு அங்​கிருந்து இயக்​கப்​பட்​டன.

இதுத​விர, புறநகர் மின்​சார ரயில்​களின் சேவை பிப்​.20 முதல் ஏப்.3 வரை 43 நாட்​களுக்கு தற்​காலிக மாற்​றங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. இதன்​பிறகு, முக்​கிய பணி​கள் முடிந்​த ​பிறகு, எழும்​பூர் நிலை​யத்​தில் இருந்து விரைவு ரயில்​களின் இயக்​கம் சீரானது.

இந்​நிலை​யில், 3-ம் கட்​ட​மாக, இரும்பு நடைமேம்​பாலப் பணி​களுக்​காக, சில விரைவு ரயில்​கள் தாம்​பரத்​துக்கு மாற்ற முடிவு செய்​யப்​பட்​டுள்​ளன.

நடைமேம்​பாலம் அமைக்க, 500 டன் எடைக்​கும் அதி​க​மான கிரேன்​கள் பயன்​படுத்​தப்​பட்​டு, இரும்பு கர்​டர்​கள் நிறு​வப்​பட​வுள்​ளன. இந்த பாலம் 18 மீட்​டர் அகலத்​துட​னும், 120 மீட்​டர் நீளத்​துட​னும் அமைய​வுள்​ளது.

தற்​போது, காந்தி இர்​வின் சாலை பகு​தி​யில் உள்ள நடைமேடை 1 முதல் 5 வரை​யில் இரும்பு நடைமேம்​பாலம் அமைக்​கப்பட உள்​ளது. இதைத் தொடர்ந்​து, 6-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரை​யில் இரும்பு நடைமேம்​பாலம் அமைக்​கும் பணி விரை​வில் தொடங்​க​வுள்​ளது.

இதனால், எழும்​பூரில் இருந்து இயக்​கப்​படும் விரைவு ரயில்​கள் மீண்​டும் தாம்​பரத்​துக்கு மாற்ற முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இது குறித்​து, ரயில்வே அதி​காரி​கள் கூறுகையில், ‘‘நடைமேம்​பாலம் அமைக்​கும் பணி​யால், சில விரைவு ரயில்​களை தாம்​பரத்​துக்கு மாற்​று​வது தொடர்​பாக, தெற்கு ரயில்வே தலை​மையகத்​துக்கு பரிந்​துரை செய்​துள்​ளோம்.அனு​மதி கிடைத்த பிறகு மாற்​றம் செய்​யப்​படும்.

இந்த மாற்​றம் விரை​வில் அமலுக்கு வரும். பயணி​களுக்கு எவ்​வித தொந்​தரவு இல்​லாமல், ரயில்​ சேவையை மாற்​ற நடவடிக்​கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. மின்​சார ரயில்​கள் 5, 6-வது நடைமேடைகளில் இருந்து இயக்​கு​வது குறித்​தும் ஆலோ​சிக்​கப்​படு​கிறது. இவ்​வாறு அவர்கள் கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in