திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்லத்தி மரத்திலிருந்த தர்கா கொடி அகற்றம்

திருப்பரங்குன்றம் மலை |கோப்புப் படம்

திருப்பரங்குன்றம் மலை |கோப்புப் படம்

Updated on
1 min read

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் மலை​யில் கல்​லத்தி மரத்​தில் தர்கா தரப்​பில் கட்​டப்​பட்​டிருந்த கொடியை கோயில் அதி​காரி​கள் நேற்று முன்​தினம் அகற்​றினர்.

திருப்​பரங்​குன்​றம் மலை​யில் தீபத்​தூண் அருகே கோயி​லின் தல விருட்​ச​மான கல்​லத்தி மரம் உள்​ளது. அங்​குள்ள சிக்​கந்​தர் தர்​கா​வில் சந்​தனக்​கூடு திரு​விழா கொடியேற்​றத்​தின்​போது கல்​லத்தி மரத்​தில் பிறை கொடி கட்​டப்​பட்​டது. இந்​தக் கொடியை அகற்​றக்​கோரி இந்து அமைப்​பு​கள் கோரிக்கை விடுத்​தன.

இந்​நிலை​யில், திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கின் நீதி​மன்ற அவம​திப்பு மனு, நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​த​போது, “கோ​யிலுக்​குச் சொந்​த​மான இடத்​தில் உள்ள கல்​லத்தி மரத்​தில் பிறை கொடி கட்​டப்​பட்​டுள்​ளது. அந்​தக்கொடி ஏன் அகற்​றப்​ப​டா​மல் உள்​ளது?” என்று நீதிபதி கேள்வி எழுப்​பி​னார்.

இதையடுத்​து, கல்​லத்தி மரத்​தில் தர்கா கொடி கட்​டிய​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி கோயில் நிர்​வாகம் சார்​பில் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. அதன் பேரில் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர்.

இந்​நிலை​யில், கல்​லத்தி மரத்​தில் கட்​டப்​பட்​டிருந்த தர்கா கொடியை நேற்று முன்​தினம் இரவு கோயில் அதி​காரி​கள் அகற்​றினர். இதற்கு இந்து மக்கள் கட்சியினர் வரவேற்பு தெரி​வித்​துள்​ளனர். இதற்​கிடை​யில், கல்​லத்தி மரத்​தில் கட்​டப்​பட்​டிருந்த கொடியை அகற்​றிய​வர்​கள் மீது வழக்​குப் பதிவு செய்​யக்​கோரி தர்கா தரப்​பில் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>திருப்பரங்குன்றம் மலை |கோப்புப் படம்</p></div>
மும்பை உள்ளிட்ட பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக - சிவ சேனா’ கூட்டணி வசம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in