“அதிமுக தனது சுய நிலையை இழந்துள்ளது” - பழனிசாமி மீது சி.வி.சண்முகம் விமர்சனம்

சி.வி.சண்முகம் | கோப்புப்படம்
சி.வி.சண்முகம் | கோப்புப்படம்
Updated on
1 min read

விழுப்புரம்: ​திமுக​வுடன் கூட்​டணி வைக்க முயன்​ற​தால் அதி​முக தனது சுய நிலையை இழந்​துள்​ளது என்று முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகம் தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் திண்​டிவனத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பழனி​சாமி தலை​மையி​லான அதி​முக தொடர் தோல்​வியை சந்​தித்து வரு​கிறது. மக்​களின் நன்​ம​திப்​பை​யும் இழந்து வரு​கிறது. யாருடைய கருத்​தை​யும் கேட்க மாட்​டேன், குடும்​பத்​தினர் கருத்தை மட்​டும் கேட்​பேன், பணம் கொடுப்​பவர், பெற்​றுத் தருபவர்​களின் பேச்சை மட்​டும் பழனி​சாமி கேட்​ப​தால் நினைத்து பார்க்க முடியாத இழப்பை அதி​முக சந்​தித்​துள்​ளது.

திமுகவை வீழ்த்த வேண்​டும் என்ற நோக்​கத்​துக்​காக அதி​முக தொடங்​கப்​பட்​டது. ஆனால், முதல்​வ​ராக வர வேண்​டும் என்​ப​தற்​காக திமுக​வுடன் கூட்​டணி வைக்க முயன்​ற​தால் அதி​முக தனது சுய நிலையை இழந்​துள்​ளது. கட்​சிக்​காக உழைத்​தவர்​கள் தற்​போது இயக்​கத்​தை​விட்டு செல்​கின்​றனர். அவர்​களின் மனவலியை உணராமல் துரோகி என சாதா​ரண​மாக பழனி​சாமி சொல்​கிறார்.

தேர்​தலில் 47 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளேன் என பொய் சொல்​கிறார். அதில் 31 தொகு​தி​களில் வெற்றி பெற்றது பாமக தயவால்​தான். பாமக​வுடன் கூட்​டணி இல்லை என்​றால், வட மாவட்​டங்​களில் வெற்றி பெற்​றிருக்க முடி​யாது. இது​தான் உண்​மை. இந்த உண்​மையை ஏற்​றுக்​கொள்ள வேண்​டும். சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்​டும். தவறுகளை பழனி​சாமி உணர வேண்​டும். தவறுகளை சரி செய்ய வேண்​டும்.

அதன்பிறகு மீண்​டும் எல்​லோரும் இணைந்து செயல்​படலாம். தனது மகனை அரசி​யலுக்கு கொண்டு வரு​வதற்​காக, பழனி​சாமி தற்​போது சமூக வலை​தளத் ​தில் நாடகத்தை நடத்தி கொண்​டிருக்​கிறார். அதி​முக​வின் படு​தோல்விக்கு காரணம் பணம் மற்​றும் பதவி வெறி. நீங்​கள்​தான் இப்​போதும் பொதுச்செய​லா​ளர். எங்​கள் பக்​க​மும் குறை​கள் இருக்​கலாம். தலைமை பொறுப்​புக்கு வந்​தவர், எல்​லோரை​யும் அரவணைத்​துச் செல்ல வேண்​டும். இதற்கு நேர்​மாறாக, கட்​சி​யில் உள்​ளவர்​கள் வெளியேறும் நிலையை உருவாக்​கு​கிறார்.

பொதுக்​குழுவை உங்​கள் விருப்​பப்​படியே ஒரு தேதி​யில் கூட்ட வேண்​டும். அதற்கு கால​தாமதம் ஏற்​பட்​டால் செயற்​குழுவை கூட்ட வேண்​டும். அதற்கு ஏன் அச்​சப்​படு​கிறீர்​கள், மாற்று கருத்தை ஏற்​றுக் கொள்​ளும் தலை​வர்​தான் சிறந்த தலை​வர். வெற்​றிக்​காக இறங்கி வர வேண்​டும். சரி​யான பாதைக்கு அதி​முகவை கொண்டு செல்​லும் வழி​முறையை கலந்து பேசி முடிவு செய்​யுங்​கள்.

நீங்​கள் திமுக​வுடன் போக வேண்​டும் என்று சொன்ன பிறகு ​தான், இந்த கருத்​துக்கு உடன்பட முடி​யாது என்று நாங்​கள் வெளியே வந்​தோம். இந்த ஒரு கருத்தை தவிர, 8 ஆண்​டு​ நீங்​கள் சொன்ன அனைத்து கருத்​துகளை​யும் நாங்​கள் ஏற்​றுக்கொண்​டுள்​ளோம் காலம் நம்கையை விட்​டுப் போக​வில்​லை.

நாங்​கள் சில காலம் பொறுத்​திருப்​போம். எங்​களுக்கு என்ன வழி​முறை​கள் என்று எங்​களுக்​கும் தெரி​யும். அந்த நிலைக்கு எங்​களை தள்ள வேண்​டாம். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

சி.வி.சண்முகம் | கோப்புப்படம்
லெபனான் மீது வான்வழி தாக்குதல்: இஸ்ரேலுக்கு ட்ரம்ப் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in