

கம்பம்: கம்பம் தொகுதி தவெக எம்எல்ஏ ஜெகநாத்மிஸ்ரா, சில நாட்களுக்கு முன்பு கம்பத்தில் உள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்தார். அப்போது அங்கு தோசையை சாப்பிட்டு விட்டு அதன் தரத்தை சோதனை செய்தார்.
இதுகுறித்த வீடியோவும் அவர் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அம்மா உணவகத்தில் இட்லி, பொங்கல், சாம்பார் சாதம் உள்ளிட்ட கலவை சாதமே விற்பனை செய்யப்படுகின்றன. தோசை அங்கு சுடப்படுவதில்லை. வெளியில் இருந்து வாங்கி வந்த தோசையை அம்மா உணவகத்தில் வைத்து சாப்பிட்டு விட்டு ரீல்ஸ் வெளியிட்டு எம்எல்ஏ விளம்பரம் தேடுகிறார் என்று விமர்சனம் எழுந்தது.
இதுகுறித்து எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா கூறுகையில், கம்பம் அம்மா உணவகத்தில் இட்லி அவிக்கும் பெரிய கொப்பரை பழுதடைந்துள்ளதால், பல ஆண்டுகளாக இங்கு தோசை வழங்கப்படுகிறது இது தெரியாமல் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என்றார். இதனைத் தொடர்ந்து, அம்மா உணவக ஊழியர்களின் கருத்துகளும் பரவி வருகின்றன.