மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை: பெ.சண்முகம் கருத்து

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்.

Updated on
1 min read

புதுக்​கோட்டை: மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யில் நாங்​கள் இருக்​கிறோ​மா, இல்​லையா என்​ப​தை​விட, அந்த கூட்​ட​ணியே தற்​போது இல்லை என மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் தெரி​வித்​தார்.

புதுக்​கோட்​டை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: ஏதாவது ஒரு கட்​சியை அழிக்க வேண்​டும் என்​பது பாஜக​வின் திட்​டம். அதற்கு அதி​முக பலி​யாகி இருக்​கிறது. அடுத்த தேர்​தலுக்கு அதி​முக இருக்​குமா என்​பது கேள்விக்​குறி​தான். மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யில் நாங்​கள் இருக்​கிறோ​மா, இல்​லையா என்​ப​தை​விட அந்த கூட்​ட​ணியே தற்​போது இல்லை என்​பது​தான் முக்​கியமானது. அதே​நேரத்​தில், தமிழகத்​தின் நலன் சார்ந்த பிரச்​சினை​யில் திமுக​வுடன் இணைந்து போராடு​வோம்.

தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யும் தற்​போது இல்லை. ஏனெனில், தவெக அரசின் நம்​பிக்கை கோரும் வாக்​கெடுப்​பில் அந்​தக்கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றிருந்த சில கட்​சிகள் எதிர்த்​தும், ஆதரித்​தும் வாக்​களித்​தன. சில கட்​சிகள் நடுநிலை வகித்​தன. இவை அரசி​யல் சூழலில் ஏற்​பட்​டுள்ள பெரிய மாற்​றம். அதி​முக எம்​எல்​ஏக்​கள் 4 பேர் ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்​ததை கடுமை​யாக எதிர்த்​தோம். இல்​லை​யேல், அந்த எண்​ணிக்கை அதி​கரித்து இருக்​கும். எம்​எல்​ஏக்​கள் கட்சி மாறு​வது தவறு. ஆனால், மற்​றவர்​கள் கட்சி மாறு​வது சகஜ​மானது​தான்.

இந்த அரசு 3 மாதம்​கூட தாங்​காது என்று திமுக தலை​வர்ஸ்டா​லின், அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி போன்ற தலைவர்​கள் பேசுவது தவறானது. தமிழகத்​தில் லாட்டரிச் சீட்டு அறவே வரக்கூ​டாது. தமிழகத்​தில் பாஜக எடு​ப​டாத​தால் மோடி, அமித்ஷா ஆசி​யுடன் ஆர்​எஸ்​எஸ்​-ன் இன்​னொரு அமைப்பை அண்​ணா​மலை தொடங்​கி​யுள்​ளார். அதில் பல லட்​சம் பேர் இணைந்​ததாக ஒரு பிம்​பத்தை கிளப்​பி​விட்​டுள்​ளார்​.

<div class="paragraphs"><p>புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம். </p></div>
தவெக அரசு மீதான குதிரை பேர புகார்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in