கன்னியாகுமரியில் விதிகளை மீறி செயல்படும் கல் குவாரிகளை மூட நீதிமன்றம் உத்தரவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

மதுரை: கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் விதி​களை மீறி செயல்​பட்டு வந்த கல் குவாரி​களை மூட​வும், குவாரி​களில் கனிமவள உதவி இயக்​குநர் ஆய்வு செய்து அறிக்கை தாக்​கல் செய்​ய​வும் உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கன்​னி​யாகுமரி மாவட்​டம் திரு​வட்​டாறு புத்​தன்​கடை சுரேஷ், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: நெல்​லை​யைச் சேர்ந்த கிரஷர் யூனிட்​டுக்கு குவாரி கற்​களை கொண்டு செல்​வதற்கு போக்​கு​வரத்து அனு​மதிச் சீட்டு வழங்​கப்​பட்​டது.

இந்த அனு​மதி சீட்டை சட்​ட​விரோத​மாக பயன்​படுத்தி கன்​னி​யாகுமரி மாவட்​டம் மேக்​கோடு பகு​தி​யில் செயல்​படும் புளூமெட்​டல் நிறு​வனம் லாரி​கள் மூலம் கற்​களை கேரளா​வுக்கு கடத்​திச் செல்​கிறது.

இந்த கடத்​தலை​யும், அங்கு நடை​பெறும் சட்​ட​விரோத கல் குவாரி நடவடிக்​கைகளை​யும் தடுக்​கக் கோரி கன்​னி​யாகுமரி மாவட்ட ஆட்​சி​யர், கனிய​வளத்​துறை அதி​காரி​களுக்கு மனு அனுப்​பினேன். அந்த மனு அடிப்​படை​யில் நடவடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை ஏற்​கெனவே விசா​ரித்த நீதிப​தி​கள், மனு​தா​ரர் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட புகைப்​படங்​களை பார்க்​கை​யில் கற்​கள் கொண்டு செல்​லும் பணி தொடர்ந்து நடை​பெறு​வது தெரி​கிறது.

இதுதொடர்​பாக ஆய்வு செய்ய வழக்​கறிஞர் ஆணை​ய​ராக முகமது​முகை​தீன் நியமிக்​கப்​படு​கிறார். அவர் கனிமவளத் துறை அதி​காரி​களு​டன் ஆய்வு செய்து அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும் என உத்​தர​விட்​டனர். அதன்​படி முகமது​முகை​தீன் ஆய்வு நடத்தி உயர் நீதி​மன்​றத்​தில் அறிக்கை தாக்​கல் செய்​தார்.

இந்த வழக்கு நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. பின்​னர் நீதிப​தி​கள், வழக்​கறிஞர் ஆணை​யர் அறிக்​கை​யில் குவாரி​களில் விதி​மீறல் இருப்​ப​தாக​வும், அனு​ம​தித்த அளவை​விட 200 அடி ஆழம் வரை கற்​கள் வெட்டி எடுக்​கப்​பட்​டுள்​ளது என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், அனு​ம​திச் சீட்டு நகலை காட்​ட​வில்லை எனக் கூறப்​பட்​டுள்​ளது. இதனால் குவாரி​களை மூட வேண்​டும். குவாரி​களை மாவட்ட கனிமவள உதவி இயக்​குநர் ஆய்வு செய்ய வேண்​டும்.

சட்​ட​விரோத​மாக எவ்​வளவு கற்​கள் வெட்டி எடுக்​கப்​பட்​டுள்​ளன, சுற்​றுச்​சூழல் பாதிப்பு என்ன, எவ்​வளவு அபராதம் விதிப்​பது என்​பது குறித்து ஜூன் 10-ம் தேதி அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும் என நீதிபதிகள் உத்​தர​விட்​டனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
எட்டயபுரம், ராமேசுவரம் அருகே இருவேறு விபத்துகளில் குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in