அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி

ஆதாரம் இல்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: அ​தி​முக எம்​எல்​ஏக்​கள் 4 பேர் ராஜி​னாமா செய்த விவ​காரத்​தில் குதிரை பேரம் நடந்​திருப்​ப​தால், சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளது.

திருச்​செந்​தூரை சேர்ந்த ராம்​கு​மார் ஆதித்​யன் என்​பவர், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில், ‘கடந்த மே 13-ம் தேதி நம்​பிக்கை வாக்​கெடுப்​பின்​போது, தவெக அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்த 25 அதி​முக எம்​எல்​ஏக்​கள் மீது கட்​சித் தாவல் தடைச் சட்​டத்​தின்​கீழ் தகுதி நீக்​கம் செய்ய அதி​முக சார்​பில் பேர​வைத் தலை​வரிடம் கடிதம் கொடுக்​கப்​பட்​டது.

அது நிலு​வை​யில் இருந்​த​போது, மே 25-ம் தேதி தவெக​வுக்கு ஆதர​வாக வாக்​களித்த மரகதம் குமர​வேல் (மது​ராந்​தகம்) ஜெயக்​கு​மார் (பெருந்​துறை), சத்​தி​ய​பாமா (தா​ராபுரம்) ஆகியோ​ரும், மே 26-ம் தேதி இசக்கி சுப்​பை​யா​வும் (அம்​பாச​முத்​திரம்) பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்​துள்​ளனர்.

அரசி​யல் லாப நோக்​குடன் 4 எம்​எல்​ஏக்​கள் தவெக​வில் இணைந்​துள்​ள​தால், இந்த விவ​காரத்​தில் குதிரை பேரம் நடந்​துள்​ளது. அதனால் இதுகுறித்து சிபிஐ விசா​ரணை நடத்த உத்​தர​விட வேண்​டும். கட்சி மாறிய 4 பேரும் குறிப்​பிட்ட காலம் வரை தேர்​தலில் போட்​டி​யிட தடை விதிக்க வேண்​டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: வெறும் யூகம், சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் எந்த ஆதா​ரங்​களும் இல்​லாமல் இந்த வழக்கு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. குதிரை பேரம் நடந்துள்ளதாக மனு​தா​ரரின் நம்​பிக்​கை​யின் அடிப்​படை​யில் சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட முடி​யாது.

குற்​றத்​துக்​கான ஆரம்​ப கட்ட முகாந்​திரம் இருப்​ப​தற்​கான ஆதா​ரங்​கள் நிரூபிக்​கப்​பட்​டால் மட்​டுமே சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட முடி​யும். 4 எம்​எல்​ஏக்​கள் திடீரென ராஜி​னாமா செய்து கட்சி மாறியதன் காரண​த்தால் இதை ஊழல் தடுப்​புச் சட்​டத்​தின்​கீழ், குற்​ற​முறு தவறான நடத்தை என கூற முடி​யாது. எனவே, சிபிஐ வி​சா​ரணை கோரிய வழக்கு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு உத்​தர​வில்​ நீதிப​தி​கள்​ கூறி​யுள்​ளனர்​.

அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி
ஒரே நாளில் ரூ.13 லட்சம் கோடி சம்பாதித்த எலான் மஸ்க்: அம்பானியின் மொத்த சொத்து மதிப்பை விட இருமடங்கு அதிகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in