

மதுரை: இந்தியர்களுக்கு குடியுரிமை அட்டை வழங்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த முத்துராமன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: பல்வேறு நாடுகளிலும் குடிமக்களுக்கு குடியுரிமை அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவிலும் ஒவ்வொரு குடிமகன்களுக்கும் தனி அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
இந்தியர்களுக்கு தனியான குடியுரிமை அட்டை இல்லாததால் அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.
ஆதார் தகவலின் அடிப்படையில் குடியுரிமைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரப்பட்டிருந்தது. மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.5-க்கு தள்ளிவைத்தது.