தொடர் மழையால் பூக்கள் சாகுபடி பாதிப்பு: தென்காசி மாவட்டத்தில் மல்லிகை கிலோ ரூ.7 ஆயிரமாக உயர்வு

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

தென்காசி / நாகர்கோவில் / மதுரை: தொடர் மழை​யால் பூக்​கள் சாகுபடி பாதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், தென்​காசி மாவட்​டத்​தில் பூக்​கள் விலை கடுமை​யாக உயர்ந்​துள்​ளது. சிவ​காமிபுரம் சந்​தை​யில் நேற்று ஒரு கிலோ மல்​லிகைப்பூ ரூ.7 ஆயிரத்​துக்கு விற்​பனை செய்​யப்​பட்​டது.

தென்​காசி மாவட்​டத்​தில் கடந்த சில நாட்​களாக கனமழை பெய்​த​தால் பூக்​கள் சாகுபடி வெகு​வாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் விலை உயர்ந்​தது. கடந்த வாரம் ஒரு கிலோ மல்​லிகைப்பூ ரூ.4 ஆயிரத்​துக்கு விற்​பனை செய்​யப்பட்​டது. பின்​னர் விலை குறை​யத் தொடங்​கியது. இந்​நிலை​யில், நேற்று பூக்​கள் விலை கடுமை​யாக உயர்ந்​தது.

சிவ​காமிபுரம் சந்​தை​யில் நேற்று ஒரு கிலோ மல்​லிகைப்பூ ரூ.7 ஆயிரத்​துக்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. பிச்​சிப்​பூ, முல்​லைப் பூ ரூ.2 ஆயிரம், காக்​கட்​டான் ரூ. 1,000, கனகாம்​பரம் ரூ.1,500-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. ஒரு கிலோ சம்​பங்கி ரூ.160 முதல் ரூ.200 வரை​யும், நந்​தி​யா​வட்டை ரூ.250, ரோஜா ரூ.160 முதல் ரூ.290, அரளிப்பூ ரூ.260, மரிக்​கொழுந்​து, கோழிக்​கொண்டை ரூ.200, கேந்தி ரூ.30 முதல் ரூ.60 வரை விற்​பனை செய்​யப்​பட்​டது. இதே​போல, தென்​காசி, சங்​கரன்​கோ​வில் சந்​தை​யிலும் ஒரு கிலோ மல்​லிகைப்பூ ரூ.7 ஆயிரத்​துக்கு விற்​பனை செய்​யப்​பட்​டது.

இதுகுறித்து வியா​பாரி​கள் கூறும்​போது, “தொடர் மழை​யால் பூக்​கள் சாகுபடி பாதிக்​கப்​பட்​டுள்ளது. மல்​லிகைப் பூ வழக்கமாக தின​மும் சராசரி​யாக 200 கிலோ முதல் 300 கிலோ வரை விற்​பனைக்கு வரும். தற்​போது அதி​கபட்​சம் 15 கிலோ வரையே வரு​கிறது. நவ. 30, டிச. 1 ஆகிய நாட்​கள் முகூர்த்த தினங்​கள் என்​ப​தால் பூக்​களுக்கு தேவை அதி​க​மாக உள்​ளது. ஆனால், வரத்து மிக​வும் குறை​வாகவே உள்​ளது. எனவே அனைத்து வகை பூக்​களின் விலை​யும் உயர்ந்​துள்​ளது” என்றனர்.

தொடர் மழை, பனிப்​பொழி​வால் குமரி மாவட்​டம் தோவாளை மலர் சந்​தை​யில் நேற்று மல்​லிகைப்பூ கிலோ ரூ.5,000-க்​கும், பிச்​சிப்பூ கிலோ ரூ.2,000-க்​கும் விற்​பனை செய்​யப்​பட்​டது.

மதுரை மாவட்​டத்​தில் நீடிக்​கும் தொடர் பனி, சாரல் மழை​யால் மல்​லிகைப் பூ உற்​பத்தி முற்​றி​லும் முடங்​கியது. மாட்​டுத்​தாவணி ஒருங்​கிணைந்த மலர் சந்​தை​யில் ஒரு கிலோ மல்​லிகைப் பூ ரூ.4.500 வரை விற்​கப்​பட்​டது.

மதுரை மாட்​டுத்​தாவணி மொத்த பூ வியா​பாரி​கள் சங்​கப் பொருளாளர் முரு​கன் கூறும்​போது, “தற்​போது மொத்த பூக்​களின் வரத்தே அரை டன் முதல் முக்​கால் டன் வரை​தான் உள்​ளது. முகூர்த்​தமே இல்​லாத இன்று (நேற்​று) மதுரை மல்​லி விலை உயர்ந்​துள்ள நிலை​யில், இனிவரும் முகூர்த்த நாட்​களில் விலை மேலும் அதி​கரிக்கும்’ என்​றார்​.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் சுட்டு பிடிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in