கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் சுட்டு பிடிப்பு

கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் சுட்டு பிடிப்பு
Updated on
2 min read

கோவை: கோவை கவுண்​டம்​பாளை​யத்​தில் 13 வீடு​களில், தொடர் திருட்​டில் ஈடு​பட்ட வடமாநிலத்​தைச் சேர்ந்த 3 கொள்​ளை​யர்​கள் சுட்டு பிடித்து கைது செய்​யப்​பட்​டனர்.

கோவை மேட்​டுப்​பாளை​யம் சாலை, கவுண்​டம்​பாளை​யத்​தில், தமிழ்​நாடு அரசு வீட்​டு​வசதி வாரிய அடுக்​கு​மாடி குடி​யிருப்பு வளாகம் உள்​ளது. இதில் 1,848 வீடு​கள் உள்​ளன. அரசுத்​துறை அதி​காரி​கள், அலு​வலர்​கள் இங்கு வசிக்​கின்​றனர். இந்நிலையில், ஊழியர்​கள் நேற்று முன்​தினம் வீட்டை பூட்​டி​விட்டு வேலைக்​குச் சென்​றனர். மாலை வந்து பார்த்​த​போது, சிலரது வீட்டின் பூட்டு உடைக்​கப்​பட்​டிருந்​தது. உள்ளே சென்று பார்த்​தபோது, பொருட்​கள் கலைந்து கிடந்​தன. வீட்​டிலிருந்த பீரோ உடைக்​கப்​பட்டு அதிலிருந்த நகை, பணம் திருடப்​பட்​டிருந்​தது.

42 பவுன் நகை திருட்டு: இதுகுறித்து தகவல் அறிந்த, இன்​ஸ்​பெக்​டர் வெற்​றிச்​செல்வி தலை​மையி​லான கவுண்​டம்​பாளை​யம் போலீ​ஸார், சம்பவ இடத்​துக்கு வந்து விசா​ரித்​தனர். அதில், ‘ஏ’ பிளாக்​கில் உள்ள 3 வீடு​களி​லும், ‘சி3’ பிளாக்​கில் 10 வீடு​களி​லும் என மொத்​தம் 13 வீடு​களின் பூட்டை உடைத்து 42 பவுன் நகை, ரூ.1.50 லட்​சம் பணம், 500 கிராம் வெள்​ளிப் பொருட்​கள் ஆகியவை திருடப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது. சிறப்பு மாவட்ட வரு​வாய் அலு​வலர் வீட்​டில் மட்​டும் 30 பவுன் நகை திருடு போயிருந்​தது.

இதுகுறித்து பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் அளித்த புகாரின் பேரில், கவுண்​டம்​பாளை​யம் போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து விசா​ரித்​தனர். இவ்​வழக்​கில் தொடர்​புடைய நபர்​களை பிடிக்க, மாநகர காவல் ஆணை​யர் ஆ.சரவண சுந்​தர் தலை​மை​யில், துணை ஆணை​யர் தேவ​நாதன் மேற்​பார்​வை​யில் இன்​ஸ்​பெக்​டர் வெற்​றிச்​செல்வி தலை​மை​யில் தனிப்​படை அமைக்​கப்​பட்​டது.

அதைத்​தொடர்ந்​து, குடி​யிருப்பு வளாகம் மற்​றும் சுற்​றுப்​புறப் பகு​தி​களில் உள்ள சிசிடிவி கேம​ராக்​களை போலீ​ஸார் ஆய்வு செய்​தனர். அதில், சந்​தேகத்​துக்​குரிய முறை​யில் இரு​வர், கையில் பொருட்​களை எடுத்​துச் செல்​வது தெரிந்​தது. போலீ​ஸாரின் புலன் விசா​ரணை​யில், இவ்​வழக்​கில் தொடர்​புடைய 3 பேர் கும்​பல், குனிய​முத்​தூர் பி.கே.புதூரிலிருந்து குளத்​துப்​பாளை​யம் செல்​லும் சாலை​யில் உள்ள திருநகர் காலனி​யில் உள்ள ஒரு வீட்​டில் பதுங்​கி​யிருப்​பது தெரிந்​தது.

தப்ப முயற்சி: தனிப்​படை போலீ​ஸார் நேற்று காலை அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். வீட்​டில் இருந்த மூவரையும் சரணடை​யும்​படி எச்​சரிக்கை செய்​தனர். ஆனால், அவர்கள் அரி​வாளால் போலீ​ஸாரை வெட்​டி​விட்டு தப்ப முயன்​றனர். அவர்​கள் வெட்​டிய​தில் போலீஸ்​காரர் பார்த்திபன் காயமடைந்​தார். தொடர்ந்து போலீ​ஸார் தங்​களிட​மிருந்த துப்​பாக்​கி​யால் மூவரது வலது காலில் சுட்​டு ​பிடித்​தனர்.

விசா​ரணை​யில் பிடிபட்​ட​வர்​கள் உத்​தரப்​பிரதேச மாநிலம் மஜித்​புவா பகு​தி​யைச் சேர்ந்த இர்​பான்​(43), காஜி​வாலா பகு​தி​யைச் சேர்ந்த கல்லு ஆரிப்​(60), காஜிபூர் பகு​தி​யைச் சேர்ந்த ஆசிப்​(45) என தெரிந்​தது. மூவரை​யும் கைது செய்த போலீ​ஸார், அவர்​களை சிகிச்​சைக்​காக கோவை அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​தனர். அங்கு போலீ​ஸ் பாது​காப்​புடன் அவர்​களுக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

இச்​சம்​பவம் தொடர்​பாக மாநகர காவல் ஆணை​யர் ஆ.சரவண சுந்​தர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “மூவரும் போலீ​ஸாரை தாக்​கி​விட்டு தப்ப முயன்​ற​தால் சுட்​டு ​பிடித்து கைது செய்​யப்​பட்​டனர். இவர்​களின் கைரேகை உள்​ளிட்ட விவரங்​கள் உத்​தரப்​பிரதேசம், மத்​தி​யப்​பிரதேசம், ராஜஸ்​தான், டெல்லி ஆகிய மாநில போலீ​ஸாருக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளன. அங்கு ஏதாவது வழக்​கு​களில் இவர்​களுக்கு தொடர்​பிருக்​கிறதா என்​பது பின்​னர் தெரிய​வரும்.

துணி வியாபாரம்: இவர்​கள் தங்​கி​யிருந்த இடத்​தில், ஏற்​கெனவே வடமாநிலத்​தைச் சேர்ந்த 12 பேர் தங்கி, அலுமினிய பாத்​திர வியா​பாரத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இவர்​கள் மூவரும், தீபாவளிக்கு முன்பு இங்கு வந்து தங்​கி​யுள்​ளனர். துணி வியா​பாரம் செய்ய வந்​துள்​ள​தாக கூறி​யுள்​ளனர். தொடர்ந்து மக்​கள் அதி​கம் வசிக்​கும் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களை நோட்​ட​மிட்​டுள்​ளனர். அதன்​படி, கவுண்​டம்​பாளை​யம் வீட்​டு​வசதி வாரிய அடுக்​கு​மாடி குடி​யிருப்​புக்​குள் நுழைந்து திருட்​டில் ஈடு​பட்​டுள்​ளனர். 3 மணி நேரத்​தில் 13 வீடு​களில் திருடி​யுள்​ளனர். பிடிபட்ட இவர்​கள், பவாரியா கொள்​ளைக் கூட்​டத்​துடன் தொடர்​புடைய​வர்​களா என்​பது குறித்​தும்​ வி​சா​ரித்​து வரு​கிறோம்​” என்​றார்​.

கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் சுட்டு பிடிப்பு
நாகை முதல் திருவள்ளூர் வரை முன்னெச்சரிக்கை தேவை: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in