

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர்.பாண்டியன்
திருவாரூர்: மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவின் வரைவுத்திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அது சட்டத்துக்கு உட்பட்டதா என்பதை மத்திய அரசும், நீர் வள ஆணையமும் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளது.
ஆனால், அதற்கு மாறாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் பாட்டீலிடம் தமிழகம் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும், அணை கட்ட அனுமதி வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நடவடிக்கை ஆகும். எனவே தமிழக அரசு, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.
இந்நிலையில், வாட்டாள் நாகராஜ் ஜூலை 15-ல் போராட்டம் அறிவித்துள்ளார். காவிரி பிரச்சனையில் இன மோதலை உருவாக்குவதை அனுமதிக்க கூடாது. தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படுமேயானால் காங்கிரஸ் தேசிய தலைமை பொறுப்பேற்க வேண்டும்.