திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு

நிர்மல்குமார் |கோப்புப் படம்

நிர்மல்குமார் |கோப்புப் படம்

Updated on
1 min read

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீபம் வழக்​கில் அமைச்​சர் நிர்​மல்​கு​மாருக்கு எதி​ராக உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீதி​மன்ற அவம​திப்பு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என்ற தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவு நிறைவேற்​றப்​ப​டாத நிலை​யில், அப்​போதைய மதுரை மாவட்ட ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார், மாநகர் காவல் ஆணை​யர் லோக​நாதன், கோயில் செயல் அலு​வலர் யக்​ஞ​நா​ராயணன் ஆகியோ​ருக்கு எதி​ராக உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீதி​மன்ற அவம​திப்பு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்த மனு விசா​ரணைக்கு வந்​த​போது மூவரும் ஆஜராகி நீதி​மன்ற உத்​தரவை அமல்​படுத்​தாததற்கு வருத்​தம் தெரி​வித்​தனர். பின்​னர் தனி நீதிப​தி​யின் நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு எதி​ராக மேல்​முறை​யீடு செய்​தனர். இந்த மேல்​முறை​யீட்​டில் தனி நீதிப​தி​யின் நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்​குத் தடை விதிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் தற்​போது திருப்​பரங்​குன்​றம் வழக்கு தொடர்​பான நீதி​மன்ற அவம​திப்பு மனு​வில் சட்​டம் மற்​றும் மின்​துறை அமைச்​சர் நிர்​மல்​கு​மாரை​யும் சேர்த்து பிர​தான வழக்​கின் மனு​தா​ரர்​களில் ஒரு​வ​ரான பரமசிவம் மனுத் தாக்​கல் செய்​துள்ளார். அதில், அமைச்​சர் நிர்​மல்​கு​மார், திருப்​பரங்​குன்​றம் தொகுதி எம்​எல்​ஏ​வாக​ உள்​ளார். அவர் சமீபத்​தில் திருப்​பரங்​குன்​றம் மலை​யில் தீபம் ஏற்​று​வது தொடர்​பாக கருத்து தெரிவிக்​கும்​போது இரண்டு ஆண்​டுக்கு முன்​பிருந்த நடை​முறையே பின்​பற்​றப்​படும் என தெரி​வித்​துள்​ளார். திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை இரு நீதிப​தி​கள் அமர்வு உறுதி செய்​துள்​ளது.

அப்​படி​யிருக்​கும் போது உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு எதி​ராக முன்​பிருந்த நடை​முறையே பின்​பற்​றப்​படும் என அமைச்​சர் நிர்​மல்​கு​மார் தெரி​வித்​திருப்​பது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கை​யாகும். நீதி​மன்ற உத்​தரவை மதிக்​காமல் அவம​திக்​கும் வகை​யில் அமைச்​சர் கருத்து தெரி​வித்​துள்​ளார். நீதி​மன்​றத்​தை​விட அரசு உயர்ந்​தது என்​றும் நீதி​மன்ற உத்​தர​வு​களைப் பின்​பற்ற வேண்​டிய கட்​டா​யம் அரசுக்கு இல்லை என்​றும் பொது​மக்​களை தவறாக வழிநடத்​தும் நோக்​கத்​தில் அமைச்​சரின் பேச்சு உள்​ளது.

இதை அனு​ம​தித்​தால் நீதி​மன்​றங்​கள் மீதான நம்​பிக்​கையை மக்​கள் இழப்​பார்​கள். எனவே அமைச்​சர் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும் என மனு​வில் கோரப்​பட்​டுள்​ளது. இந்த மனு விரை​வில் விசா​ரணைக்கு வரும் என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

<div class="paragraphs"><p>நிர்மல்குமார் |கோப்புப் படம்</p></div>
வணிக காஸ் சிலிண்டர் விநியோக கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்: மத்திய அரசு உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in