“ஆட்​சி​யில் பங்கு வேண்​டும் என திமுக​விடம் கேட்கவில்லை!” - காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் நேர்காணல்

“ஆட்​சி​யில் பங்கு வேண்​டும் என திமுக​விடம் கேட்கவில்லை!” - காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் நேர்காணல்
Updated on
2 min read

“ஆட்​சி​யில் பங்கு என்​பது பற்றி எல்​லாம் அகில இந்​திய தலைமை முடி​வெடுக்​கும் என்று அடக்கி வாசிக்​கி​றார் தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை. ஆனால், “இம்​முறை எம்​எல்ஏ பதவி​யுடன் திருப்தி அடை​யாது காங்​கிரஸ்” என்று ஆர்ப்​பரித்​துக் கொண்டே இருக்​கி​றார் காங்​கிரஸ் சட்​டப்​பேர​வைக் குழு தலை​வர் செ.​ராஜேஷ்கு​மார். ‘இந்து தமிழ் திசை’க்​காக அவரைச் சந்​தித்​துப் பேசினோம்.

Q

பெரும்​பாலும் தென் மாவட்​டங்​களில் தான் காங்​கிரஸ் வெற்​றிகளைக் குவிக்​கும். விஜய் வரு​கை, நயி​னார் அரசி​யல் இதையெல்​லாம் தாண்டி இம்​முறை​யும் தெற்​கில் காங்​கிரஸுக்கு பழைய வெற்​றியே கிடைக்​கும் என நம்​பு​கிறீர்​களா?

A

தமிழக காங்​கிரஸைப் பொறுத்​தவரை கன்​னி​யாகுமரி, திருநெல்​வேலி, தூத்​துக்​குடி, தென்​காசி உள்​ளிட்ட தென் மாவட்​டங்​களில் வலிமை​யான நிலை​யில் இருக்​கிறது. திமுக - காங்​கிரஸ் கூட்​டணி தொடர்ந்து இந்​தப் பகு​தி​களில் வெற்றி பெற்று வரு​கிறது. ஆகவே இங்​கு, பாஜக - அதி​முக கூட்​டணி வெற்றி பெறும் வாய்ப்பு நிச்​ச​யம் இல்​லை.

Q

எஸ்​ஐஆருக்கு எதி​ரான இண்​டியா கூட்​ட​ணிக் கட்​சி​களின் ஆர்ப்​பாட்​டத்தை நாகர்​கோ​விலில் காங்​கிரஸ் புறக்​கணித்​தது ஏன்?

A

ஆர்ப்​பாட்​டம் தொடர்​பான பேனரில் பெருந்​தலை​வர் காம​ராஜர் படம் இல்லை என்​ப​தால் அதில் காங்​கிரஸ் கட்​சி​யினர் பங்​கேற்க முடிய​வில்​லை. கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் காம​ராஜரைத் தவிர்த்​து​விட்டு யாரும் அரசி​யல் செய்ய முடி​யாது.

Q

கூடு​தல் இடங்​கள், அதி​காரத்​தில் பங்கு என்ற உங்​களின் கோரிக்​கையை திமுக ஏற்​கா​விட்​டால் என்ன செய்​வீர்​கள்?

A

கூடு​தல் இடங்​கள், ஆட்​சி​யில் பங்கு என்​பதை நாங்​கள் வலி​யுறுத்​து​வது காங்​கிரஸ் தலை​மை​யிடமே தவிர, திமுக தலை​மை​யிடம் அல்ல. 1967-ல் ஆட்​சியை இழந்து 58 ஆண்​டு​கள் ஆன நிலை​யில், காங்​கிரஸ் கட்​சி​யினரிடையே மிகப்​பெரிய அளவில் சோர்வு இருக்​கிறது. எங்​களின் பெரும்​பாலான கோரிக்​கை​கள் திமுக ஆட்​சி​யில் நிறை​வேற்​றப்​பட​வில்லை என்ற ஆதங்​கத்​தின் அடிப்​படை​யில்​தான் இக்​கோரிக்கை எழுகிறது. ஆனால், இதுகுறித்து காங்​கிரஸ் தலைமை திமுக தலை​மை​யிடம் பேசி எடுக்​கும் முடிவை நாங்​கள் ஏற்​றுக்​கொள்​வோம்.

Q

திமுக மைனாரிட்டி அரசாக இருந்​த​போது​கூட எழாத ‘ஆட்​சி​யில் பங்​கு’ கோஷம் இப்​போது தீவிர​மாக ஒலிக்க என்ன காரணம்?

A

ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​டணி அரசின் நல்​லிணக்​கத்​துக்​காக, தேசிய நலன் கரு​தி, 2006-ல் தமி​ழ​கத்​தில் ஆட்​சி​யில் பங்கு கேட்​காமல் காங்​கிரஸ் தலைமை தவிர்த்​தது.

Q

தமி​ழ​கத்​தில் எப்​போது​தான் காம​ராஜர் ஆட்சி அமை​யும்​... அப்​படி அமைக்க முடி​யாமல் இருப்​ப​தற்கு எது தடை​யாக உள்​ளது?

A

காம​ராஜர் ஆட்​சியை மீண்​டும் அமைப்​பது என்​பது காங்​கிரஸ் கட்​சி​யினரின் நீண்​ட​கால கனவு. அந்​தக் கனவு மெய்பட 1989-ல் அமரர் ராஜீவ் காந்தி மேற்​கொண்ட தீவிர பரப்​புரை​யின் காரண​மாக, 20 சதவீத வாக்​கு​களைப் பெற்று 26 இடங்​களி​லும் வெற்றி பெற்​றோம். கட்​சி​யைப் பலப்​படுத்தி மீண்​டும் அத்​தகைய முயற்​சியை மேற்​கொண்டு எங்​கள் லட்​சி​யத்தை அடையப் பாடு​படு​வோம்.

Q

தமிழக காங்​கிரஸின் பலம் மற்​றும் பலவீன​மாக எதைக் கருதுகிறீர்​கள்?

A

தமி​ழ​கத்​தில் 50 ஆண்​டு​களுக்​கும் மேலாக ஆட்சி அதி​காரத்​தில் இல்லை என்​றாலும் உயிரோட்​ட​முள்ள, வெற்​றியை நிர்​ண​யிக்​கும் இயக்​க​மாக இன்​றைக்​கும் காங்​கிரஸ் கட்சி இருப்​ப​தைப் பலமாகக் கருதுகி​றோம். ஆனால், தொடர்ந்து கூட்​ட​ணி​யில் இருப்​ப​தால், தேர்​தல் அரசி​யலில் வெற்றி பெற்​றாலும், கொள்கை ரீதி​யாகத் தனித்​தன்​மை​யுடன் செயல்​பட்டு காங்​கிரஸை அமைப்பு ரீதி​யாக வலிமைப்​படுத்த முடிய​வில்​லை.

Q

கடந்த நான்​கரை ஆண்​டு​கால திமுக ஆட்​சிக்கு என்ன மதிப்​பீடு தரு​வீர்​கள்?

A

திமுக ஆட்​சியை பொறுத்​தவரை, கொடுத்த வாக்​குறு​தி​களில் பெரும்​பாலான​வற்றை நிறை​வேற்​றி​யிருக்​கி​றார்​கள். கொடுக்​காத வாக்​குறு​தி​களை​யும் நிறை​வேற்​றி​யிருக்​கி​றார்​கள். அனைத்​துத் துறை​களி​லும் நிறை​வேற்​றப்​பட்​டுள்ள திட்​டங்​களால் தமிழக மக்​கள் பயனடைந்து வரு​கி​றார்​கள். எனவே, திமுக ஆட்​சிக்கு நூற்​றுக்கு 80 மதிப்​பெண்​கள் அளிக்க விரும்​பு​கிறேன்.

Q

ஆளும் கூட்​ட​ணி​யில் இருக்​கும் காங்​கிரஸ், மக்​களுக்​காக என்ன செய்​தது என்று தேர்​தலில் மக்​கள் கேட்​டால் என்ன சொல்​வீர்​கள்?

A

தமி​ழ​கத்​தில் இண்​டியா கூட்​டணி கட்​டுக்​கோப்​பாக இருப்​ப​தால் மதவாத பாஜக காலூன்ற முடி​யாத நிலையை ஏற்​படுத்தி யிருக்​கி​றோம். அமித் ஷா - ஆர்​.என்​.ரவி கூட்​டணி தமி​ழ​கத்​தில் பாஜகவை வளர்க்க எடுக்​கும் முயற்​சிகள் எது​வுமே வெற்றி பெற​வில்​லை. பெரி​யார், காம​ராஜர் பிறந்த மண்​ணில் வகுப்​பு​வாத, பாசிச சக்​தி​கள் எந்​தக் காலத்​தி​லும் காலூன்ற முடி​யாது.

Q

நீட் தேர்​வு, பழைய ஓய்​வூ​திய திட்​டம் அமல் உள்​ளிட்ட திமுக தந்த இன்​னும் பல வாக்​குறு​தி​கள் இன்​னும் தொங்​கலில் இருக்​கிறதே..?

A

நீட் தேர்வு ரத்​துக்​காக சட்​டப் பேர​வை​யில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மானத்​தின் மீது முடி​வெடுக்​காமல் நீண்ட நாட்​களாக கிடப்​பில் போட்​டிருந்த ஆளுநர், பிறகு அதை குடியரசுத் தலை​வ​ருக்கு அனுப்​பி​வைத்து நிரந்​தர​மாக முடக்கி வைத்​திருக்​கி​றார். நீட் தேர்​வில் தமி​ழ​கத்​திற்கு விலக்கு அளிக்க வேண்​டிய அதி​காரம் ஒன்​றிய அரசிடம் தான் இருக்​கிறது. பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை நிறை​வேற்​று​வதற்கு கூடு​தலான நிதி தேவைப்​படு​கிறது. எனினும் அதற்​கான குழு​வைத் தமிழக அரசு நியமித்​திருக்​கிறது. அதி​முக ஆட்சி வைத்​து​விட்​டுப் போன ரூ.5 லட்​சம் கோடி கடன் சுமையோடு தான் திமுக அரசு கடந்த 4 ஆண்​டு​களாக செயல்​பட்டு வரு​கிறது. மற்​றபடி, கொடுத்த வாக்​குறு​தி​களை நிறை​வேற்ற வேண்​டுமென்ற உறுதி தமிழக முதல்​வரிடம் இருக்​கிறது.

“ஆட்​சி​யில் பங்கு வேண்​டும் என திமுக​விடம் கேட்கவில்லை!” - காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் நேர்காணல்
என்னதான் இருக்கிறது ‘சஞ்சார் சாத்தி’ செயலியில்? - வலுக்கும் எதிர்ப்பும், மத்திய அரசின் விளக்கமும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in