அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
Updated on
1 min read

சென்னை: வெனிசுலா மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்​குதல் நடத்​தி​யதை​யும், அந்​நாட்​டின் அதிபர் நிக்​கோலஸ் மதுரோ, அவரது மனை​வியை கைது செய்து சிறை​யில் அடைத்​ததை​யும் கண்​டித்​து, சென்​னை​யில் உள்ள அமெரிக்க தூதரக அலு​வல​கத்தை முற்​றுகை​யிடப் போவ​தாக இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி நேற்று முன்​தினம் அறி​வித்​தது.

இதன்​படி கட்​சி​யின் முன்​னாள் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன் தலை​மை​யில் 100-க்​கும் மேற்​பட்ட கட்​சி​யினர் தேனாம்​பேட்​டை, காம​ராஜர் அரங்​கம் முன்பு நேற்று போராட்​டத்தை தொடங்​கினர். போலீ​ஸார் அவர்​களை கலைந்து செல்ல அறி​வுறுத்​திய நிலை​யில் போராட்​டக்​காரர்​கள் கலைந்து செல்​லாத​தால், அவர்​களை கைது செய்தனர்.

போராட்​டம் குறித்து இரா.​முத்​தரசன் கூறிய​தாவது: வெனிசுலா மீது அமெரிக்கா குண்டு வீசி, அந்​நாட்​டின் அதிபர், அவரது மனை​வியை கடத்​திச் சென்று சிறை​யில் அடைத்​திருப்​பது வன்​மை​யான கண்​டனத்​துக்​குரியது.

அது​மட்​டுமின்றி இனி வெனிசுலா நாட்​டையே அமெரிக்கா தான் நிர்​வகிக்​கும் என்று அறி​வித்​திருப்​பதும் மிக​வும் ஆபத்​தானது. அமெரிக்​கா​வின் செயல்​பாட்டை கண்​டித்து பல்வேறு நாட்​டின் பிரதமர், அதிபர்​கள் கண்டன அறிக்​கைகளை வெளி​யிட்டு வரு​கின்​றனர்.

ஆனால் நம் பிரதமர் மவுனம் சாதித்து வரு​கிறார். எனவே இச்​சம்​பவத்​துக்கு எதி​ராக அமெரிக்க அதிபர் டிரம்பை வன்​மை​யாகக் கண்​டிக்க பிரதமர் மோடி முன் வர வேண்​டும்.

இந்த கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போராட்​டம் நடத்​தப்​பட்​டது. இவ்​வாறு அவர் கூறி​னார். இந்த போராட்​டத்​தில் இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில துணைச் செய​லா​ளர் எம்​.ர​வி, தேசி​யக் குழு உறுப்​பினர் ஜி.ஆர்​.ர​வீந்​திர​நாத்​ உள்​ளிட்டோர் பங்கேற்றனர்.

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
80 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் சென்னை ஐஐடி ‘சாரங்’ கலாச்சார விழா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in