வாக்கு எண்ணும் மையங்களில் தடையற்ற மின் விநியோகத்தை கண்காணிக்க குழுக்கள் அமைப்பு

வாக்கு எண்ணும் மையங்களில் தடையற்ற மின் விநியோகத்தை கண்காணிக்க குழுக்கள் அமைப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான வாக்கு எண்​ணிக்கை இன்று நடை​பெறுகிறது.

வாக்கு எண்​ணும் மையங்​களில் தடையில்லா மின்​சா​ரம் வழங்​கப்படு​வது முக்​கி​யம் என்​ப​தால் அதற்காக தமிழ்​நாடு மின் வாரி​யம் சார்​பில் நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. வாக்கு எண்​ணிக்கை மையங்​களின் அனைத்து பகு​தி​களி​லும் முன்​கூட்​டியே பராமரிப்பு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ள​தாக மின்​வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

மேலும், அனைத்து மையங்​களி​லும் களப் பணி​யாளர்​கள் எப்​போதும் தயார் நிலை​யில் இருக்​க​வும், கூடு​தல் மின் ஆதா​ரங்​களும், மாற்று ஏற்​பாடு​கள் செய்​ய​வும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

அத்​துடன், அனைத்து மையங்​களி​லும் தடையற்ற மின் விநி​யோகம் நடை​பெறு​வதை உறுதி செய்ய கூடு​தல் இயக்​குநர்​கள், மேற்​பார்வை பொறி​யாளர்​கள் கொண்ட கண்​காணிப்​புக் குழுக்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக மின்​வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்​.

வாக்கு எண்ணும் மையங்களில் தடையற்ற மின் விநியோகத்தை கண்காணிக்க குழுக்கள் அமைப்பு
தமிழகத்தில் கத்திரி வெயில் நாளை தொடக்கம்; 5 டிகிரி வெப்பநிலை உயரும்: வானிலை ஆய்வு மையம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in