திருச்செங்கோடு கோயில் தேரோட்டத்தில் சோகம்: தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

மற்றொரு இளைஞருக்கு தீவிர சிகிச்சை
ஹர்​ஷவர்​தன்

ஹர்​ஷவர்​தன்

Updated on
1 min read

நாமக்கல்: ​திருச்​செங்​கோடு அர்த்​த​நாரீஸ்​வரர் கோயில் தேரோட்​டத்​தின்​போது தேர் சக்​கரத்​தில் சிக்கி கல்​லூரி மாணவர் உயி​ரிழந்​தார். மற்​றொருவர் காயமடைந்தார்.

நாமக்​கல் மாவட்​டம் திருச்​செங்​கோடு அர்த்​த​நாரீஸ்​வரர் மலைக்​கோயி​லில் வைகாசி தேர்த்​திரு​விழா தேரோட்​டம் நேற்று நடை​பெற்​றது. அப்​போது, எதிர்​பா​ராத​வித​மாக தேர் நின்ற இடத்​தில் உள்ள சுவர் மற்​றும் தேர் சக்​கரத்​தின் இடையே இரு இளைஞர்​கள் சிக்கி நசுங்​கினர். அவர்​களை பக்​தர்​கள் மீட்​டு, திருச்​செங்​கோடு மருத்​து​வ​மனைக்கும் பின்​னர் சேலம் அரசு மருத்​து​வ​மனைக்கும் அனுப்பினர்.

இதில் திருச்​செங்​கோடு கூட்​டப்​பள்​ளியைச் சேர்ந்த தனி​யார் கல்​லூரி மாணவர் ஹர்​ஷவர்​தன் (20) சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்தார். இவரது நண்​ப​ர் வாலரைகேட் பகு​தி​யைச் சேர்ந்த கல்​லூரி மாணவர் சஷ்டிகன் இடுப்பு எலும்பு முறிவு ஏற்​பட்டு கோவை தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்டார். இதுதொடர்​பாக திருச்​செங்​கோடு போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

இக்​கோயி​லில் 450 ஆண்​டு​களாக பழமை​யான தேர் உலா வந்த நிலை​யில், ரூ.2.17 கோடி​யில் புதிய தேர் கட்​டப்​பட்டு 3 மாதங்​களுக்கு முன்​னர் வெள்​ளோட்​டம் நடை​பெற்று முதல்​முறை​யாக நேற்றுதான் தேரோட்​டம் நடந்​தது. இதனிடையே உயி​ரிழந்த இளைஞரின் குடும்​பத்​தினரைச் சந்​தித்து அமைச்​சர்​கள் அருண்​ராஜ், லோகேஷ் தமிழ்ச்​செல்​வன், தமிழன் பார்த்​திபன் ஆகியோர் ஆறு​தல் கூறினர்.

முதல்வர் நிவாரணம்: இதனிடையே இரங்​கல் தெரி​வித்து அறிக்கை வெளி​யிட்ட முதல்​வர் விஜய் உயி​ரிழந்​தவர் குடும்​பத்​துக்கு ரூ.5 லட்​சம் நிவாரணம் அறி​வித்​துள்​ளார். மேலும், காயமடைந்த சஷ்டிக​னுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்​க​வும் உத்​தர​விட்​டுள்​ள​தாக​வும் அவர் தெரி​வித்​துள்​ளார்.

<div class="paragraphs"><p>ஹர்​ஷவர்​தன்</p></div>
7 மாவட்டங்களில் பாஜக தோல்வி குறித்த ஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்த அண்ணாமலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in