“பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்” - முதல்வர் விஜய் உத்தரவு

“பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்” - முதல்வர் விஜய் உத்தரவு
Updated on
2 min read

சென்னை: தென்​மேற்​கு, வடகிழக்​குப் பரு​வ​மழைகளை எதிர்​கொள்ள அனைத்து துறை​களும், மாவட்ட நிர்​வாகங்​களும் தயார் நிலை​யில் இருக்க வேண்​டும். பேரிடர் காலங்​களில் உயிர் சேதத்தை தவிர்ப்​பது முக்​கிய நோக்​க​மாக இருக்க வேண்​டும் என்று அதி​காரி​களுக்கு முதல்​வர் விஜய் அறி​வுறுத்தி உள்​ளார்.

தென்​மேற்​குப் பரு​வ​மழை அந்​த​மான் - நிக்​கோ​பார் தீவு​களில் கடந்த மே 16-ம் தேதி தொடங்​கிய நிலை​யில், கேரளா மற்​றும் தமிழகத்​தின் சில பகு​தி​களில் கடந்த 4-ம் தேதி முதல் தொடங்​கி​யுள்​ளது. பரு​வ​மழை மேலும் தீவிரமடைவதற்கு ஏற்ற சூழல் நில​வு​கிறது. இந்த ஆண்டு தென்​மேற்​குப் பரு​வ​மழைக் காலத்​தில் தமிழகத்​தில் மழைப்​பொழிவு வழக்​கத்​தை​விட குறை​வாகப் பெய்​யக்​கூடும் என்று இந்​திய வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இந்த நிலை​யில், சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய் தலை​மை​யில் பேரிடர் மேலாண்மை ஆணை​யக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. தென்​மேற்​குப் பரு​வ​மழையை எதிர்​கொள்​ளும் வகை​யில் எடுக்​கப்​பட்​டுள்ள முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் குறித்து முதல்​வரிடம் சம்​மந்​தப்​பட்ட துறைச் செயலர்​கள், மேற்​குத் தொடர்ச்சி மலையை ஒட்​டி​யுள்ள மாவட்​டங்​களின் ஆட்​சி​யர்​கள் எடுத்​துரைத்​தனர்.

இதைத் தொடர்ந்​து, அதி​காரி​களுக்கு பல்​வேறு உத்​தர​வு​களை வழங்கி முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: எந்த ஒரு பேரிடர் சூழலை​யும் எதிர்​கொள்ள அனைத்து துறை​களும், மாவட்ட நிர்​வாகங்​களும் தயார் நிலை​யில் இருக்க வேண்​டும். பேரிடர் காலங்​களில் உயிர் சேதத்தை தவிர்ப்​பது முக்​கிய நோக்​க​மாக இருக்க வேண்​டும். மாவட்ட நிர்​வாகம், மாவட்ட அவசர​கால செயல்​பாட்டு மையம் 24 மணிநேர​மும் செயல்பட வேண்​டும். மீட்​புக் கருவி​கள், முதல்​நிலை மீட்​பாளர்​கள், மீட்​புப் படை​யினர் தயார் நிலை​யில் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டும். தேவைப்​படும் இடங்​களில் மீட்​புப் படை​யினர் முன்​னரே நிலைநிறுத்​தப்பட வேண்​டும்.

மக்​களை தங்​கவைக்​கும் வகை​யில் நிவாரண மையங்​களை தயா​ராக, தூய்​மை​யாக வைக்க வேண்​டும். அங்கு மின்​சா​ரம், உணவு, பாது​காக்​கப்​பட்ட குடிநீர் போன்றஅடிப்​படை வசதி​களை மாவட்ட நிர்​வாகம் உறுதி செய்ய வேண்​டும். மழைநீர் தேக்​கம், சாலைகளில் மரம் விழுதல் போன்ற மழைக்​கால பாதிப்​பு​களை பெருநகர சென்னை மாநக​ராட்சி மற்​றும் மாவட்ட நிர்​வாகங்​கள் உடனுக்​குடன் சரிசெய்ய வேண்​டும். அறுந்து விழும் நிலை​யில் உள்ள மின்​கம்​பிகள், பலவீன​மான மின்​கம்​பங்​கள், மின்​கோபுரங்​களை மின்​துறை​யினர் உடனே சீரமைக்க வேண்​டும். மழைக்​கால நோய்த் தொற்​றுகளுக்கு எதி​ரான தடுப்பு நடவடிக்​கைகளை ஊரக வளர்ச்​சி, நகராட்சி நிர்​வாகம், சுகா​தா​ரத் துறை​யினர் ஒருங்​கிணைந்து மேற்​கொள்ள வேண்​டும்.

அதே​போல, வடகிழக்​குப் பரு​வ​மழைக் காலங்​களில் ஏற்​படும் பாதிப்​பு​களை தவிர்க்​கும் வகை​யில், நீர்​நிலைகளைத் தூர்​வாருதல், நீர்​நிலை ஆக்​கிரமிப்​பு​கள், ஆகா​யத் தாமரைகளை அகற்​று​தல் போன்ற பணி​களை இப்​போதே மேற்​கொள்ள வேண்​டும். வடகிழக்​குப் பரு​வ​மழை தொடங்க இன்​னும் 4 மாதங்​கள் இருப்​ப​தால், முன்​னேற்​பாட்​டுப் பணி​களை அதற்​குள் முடித்​து, எத்​தகைய சூழலை​யும் எதிர்​கொள்ள தயார் நிலை​யில் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் அறி​வுறுத்​தி​னார்.

இக்​கூட்​டத்​தில் வரு​வாய், பேரிடர் மேலாண்​மைத் துறை அமைச்​சர் செங்​கோட்​டையன், தலை​மைச் செயலர் சாய்​கு​மார், வரு​வாய் நிர்​வாக ஆணை​யர் நா.​முரு​கானந்​தம், பேரிடர் மேலாண்மை ஆணை​யர் சிஜி தாமஸ் வைத்​யன், மின்​வாரி​யத் தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன், துறைச் செயலர்​கள் க.மணி​வாசன் (உள்​துறை), எம்​.ஏ.சித்​திக் (நி​தி), சத்​யபிரத சாஹு (நீர்​வளம்), கே.எஸ்​.பழனி​சாமி (வரு​வாய்), டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால், தீயணைப்​புத்​ துறை இயக்​குநர்​ சீமா அகர்​வால்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

“பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்” - முதல்வர் விஜய் உத்தரவு
புதிய அரசியல் இயக்கம்: அண்ணாமலை அறிவிப்பு; 10 மணி நேரத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள் பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in