751 உதவி மருத்துவர்கள், 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்

அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்காக ‘நலம் TN’ இணையதளம் தொடக்கம்
751 உதவி மருத்துவர்கள், 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்
Updated on
2 min read

சென்னை: அரசு மருத்​து​வ​மனை​களின் மேம்​பாட்​டுக்கு நன்​கொடை பெறும் வகை​யில் ‘நலம் TN’ என்ற இணை​யதளத்தை தொடங்கி வைத்த முதல்​வர் விஜய், மருத்​துவ பணி​யாளர் தேர்வு வாரி​யத்​தால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 751 உதவி மருத்​து​வர்​கள், 1,393 சுகா​தார ஆய்​வாளர்​களுக்கு பணிநியமன ஆணை​களை வழங்​கி​னார்.

தமிழக சுகா​தா​ரத்​துறை சார்​பில், தமிழ்​நாடு சுகா​தார அறக்​கட்​டளை வழி​யாக அரசு மருத்​து​வ​மனை மேம்​பாட்​டுக்கு அறக்​கட்​டளை மற்​றும் சமூகப் பொறுப்பு நிதி வழங்​கும் வகை​யில் ‘நலம் TN’ (www.tnhealthfoundation.org) என்ற புதிய இணை​யதளத்​தை தொடங்கி வைக்​கும் நிகழ்ச்சி சென்னை மாநிலக் கல்​லூரி வளாகத்​தில் நேற்று நடந்​தது.

இதில் பங்​கேற்ற முதல்​வர் விஜய், இணை​யதளத்தை தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் பேசும்​போது, “தமிழகத்​தின் 38 மாவட்​டங்​களில் உள்ள அனைத்து அரசு மருத்​து​வ​மனை​களி​லும் உயர் சிறப்பு சிகிச்​சைகள் வழங்​குதற்​காக, உள்​கட்​டமைப்பு மற்​றும் உயர்தர மருத்​துவ உபகரணங்​களை மேம்​படுத்​தும் நோக்​கில், பெரிய தொழில் நிறு​வனங்​கள், பெருநிறு​வனங்​களின் சமூகப் பொறுப்பு நிதி மற்​றும் தொண்டு நிறு​வனங்​கள், முன்​னாள் மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​கள், தனிப்​பட்ட நன்​கொடை​யாளர்​கள் ஆகியோரிட​மிருந்து நன்​கொடை பெற்று வெளிப்​படை​யான முறை​யில் செயல்​படுத்​து​வதற்​காக, தமிழ்​நாடு சுகா​தாரதிட்​டத்​தின் கட்​டமைப்​பின்​கீழ் இணை​யதளம் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த இணை​யதளம் மூலம் உங்​களுக்கு விருப்​ப​மான அரசு மருத்​து​வ​மனைக்கு நன்​கொடை வழங்க முடி​யும்” என்றார்.

இந்த நிகழ்​வில் அரசு மருத்​துவ கல்​லூரி​களின் பயன்​பாட்​டுக்​காக சென்​னை​யிலுள்ள கேப்​ளின் பாய்ன்ட் லெபாரட்​டரீஸ், அப்​போலோ மருத்​து​வ​மனை குழு​மத்​தினர் சமூக பொறுப்பு நிதி​யில் இருந்து தலா ரூ.1 கோடிக்​கான காசோலை மற்​றும் ஓசூரிலுள்ள டைட்​டன் இன்​ஜினீயரிங் அண்டு ஆட்​டோமேஷன் நிறு​வனத்​தினர் சமூக பொறுப்பு நிதி​யில் இருந்து ரூ.60 லட்​சத்​துக்​கான காசோலையை முதல்​வரிடம் வழங்​கினர்.

சென்​னையைச் சேர்ந்த எஸ்​.சத்யா என்​பவர், 2 ஆண்​டு​களுக்கு முன்பு எழும்​பூர் தாய்​சேய் நல மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அவருக்கு சுகப்​பிரசவத்​தில் பெண் குழந்தை பிறந்​த​போது அம்​மருத்​து​வ​மனை​யின் மருத்​து​வர்​கள், செவிலியர்​கள் மற்​றும் மருத்​துவபணி​யாளர்​கள் தாயை​யும், குழந்​தையை​யும் அன்​போடும் கவனித்து கொண்​டனர்.

அவர்​களுக்கு நன்றி தெரிவிக்​கும் வித​மாக ‘நலம் TN’ திட்​டத்​தில் அம்​மருத்​து​வ​மனை​யின் சில்லறை செல​வினங்​களுக்​காக க்யூஆர் கோடு மூல​மாக ஆயிரம் ரூபாயை நன்​கொடை​யாக முதல்​வர் முன்​னிலை​யில் சத்யா வழங்​கி​னார்.

கட்​டிடங்​கள் திறப்பு

அதைத்​தொடர்ந்​து, தமிழகம் முழு​வதும் ரூ.139 கோடியே 47 லட்​சத்​தில் கட்​டப்​பட்​டுள்ள மருத்​து​வக் கட்​டிடங்​களை முதல்​வர் விஜய் திறந்​து​வைத்​து, நவீன மருத்துவ உபகரணங்​களின் பயன்​பாட்​டினை​யும் தொடங்கி வைத்​தார்.

மேலும், மருத்​துவ பணி​யாளர் தேர்வு வாரி​யத்​தால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 751 உதவி மருத்​து​வர்​கள் மற்​றும் 1,393 சுகா​தார ஆய்​வாளர்​களுக்கு (நிலை–2) பணிநியமன ஆணை​களை முதல்​வர் விஜய் வழங்​கி​னார்.

முதல் பணிநியமன ஆணை​யை, மேடை​யில் இருந்து கீழே இறங்கிச் சென்று மாற்​றுத்திற​னாளி பெண் மருத்​து​வருக்கு வழங்​கி​னார்.

இறு​தி​யாக பணிநியமன ஆணை பெற்​றவர்​களு​டன் முதல்​வர் விஜய், குழு புகைப்​படம் மற்​றும் செல்​போனில் செல்ஃபி எடுத்து கொண்​டார்.

751 உதவி மருத்துவர்கள், 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்
அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை இணைத்துக் கொண்ட விஜய்தான் களவாணி: பழனிசாமி கடும் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in