கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டி முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்

இன்று சென்னை திரும்புகிறார்
கொடைக்கானல் நட்சத்திர ஏரியைச் சுற்றி உற்சாகமாக சைக்கிள் ஓட்டிச் சென்ற முதல்வர் ஸ்டாலின்.

கொடைக்கானல் நட்சத்திர ஏரியைச் சுற்றி உற்சாகமாக சைக்கிள் ஓட்டிச் சென்ற முதல்வர் ஸ்டாலின்.

Updated on
2 min read

கொடைக்கானல்: ​கொடைக்​கானல் நட்​சத்​திர ஏரியைச் சுற்றி முதல்​வர் ஸ்டா​லின் நேற்று காலை உற்சாகமாக சைக்​கிள் ஓட்டினார். இன்று அவர் சென்னை திரும்புகிறார்.

தமிழகத் தேர்​தல் முடிவடைந்​துள்ள நிலை​யில் கொடைக்​கானலில் 5 நாட்​கள் ஓய்​வெடுக்க குடும்​பத்​துடன் முதல்​வர் ஸ்டா​லின் வந்​துள்​ளார். நேற்று காலை நட்​சத்​திர ஏரிப் பகு​தி​யில் நடைப்​ப​யிற்​சி​யில் ஈடு​பட்​டார். அப்​போது, ஆரோக்​கி​யத்​துடன் இருக்க தின​மும் ‘வாக்​கிங் போங்​க…’ என்று பொது​மக்​களுக்கு ஆலோ​சனை வழங்​கி​னார்.

அவருடன் சுற்​றுலாப் பயணி​கள் செல்ஃபி எடுத்து கொண்​டார். சிலர் அவருக்கு மலைப்​பூண்​டு, பூங்​கொத்து வழங்​கினர். அவரைப் பார்க்க தனது தந்​தை​யுடன் வந்​திருந்த சிறுமி ஒரு​வர் ‘ஸ்​டா​லின் தொடரட்​டும், தமிழ்​நாடு வெல்​லட்​டும்’ என்ற திமுக​வின் பிரச்​சா​ரப் பாடலைப் பாடிக் காண்​பித்​தார். உடனே, சிறுமியை கன்னத்​தில் தட்​டிக் கொடுத்து பாராட்​டி​னார். இடை​யில் ஓர் உணவகத்​தில் டீ அருந்​தி​னார்.

பின்​னர், நட்​சத்​திர ஏரியைச் சுற்றி சிறிது தூரம் சைக்​கிள் பயணம் மேற்​கொண்​டார். முதல்​வர் ஸ்டா​லின் சைக்​கிள் பயணம் மேற்​கொள்​வதை அறிந்த ஏராள​மான பொது​மக்​கள் சாலை​யோரம் நின்று அவருக்கு கையசைத்து மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தினர். அவரும் பொது​மக்​களைப் பார்த்து கையசைத்​த​வாறே சைக்​கிள் பயணம் மேற்​கொண்​டார். பின்​னர், காரில் ஏறி தங்​கும் விடு​திக்கு திரும்​பி​னார்.

காலை உணவுக்​குப் பிறகு கொடைக்​கானலில் உள்ள தனி​யார் அருங்​காட்​சி​யகத்​துக்​குச் சென்ற முதல்​வர், அங்​கிருந்த பழமை​யான கார்​கள், நாண​யங்​கள், ரேடியோக்​களை பார்​வை​யிட்டு விடுதி திரும்​பி​னார். முதல்​வர் ஓய்​வெடுப்​ப​தற்​காக வந்​த​தால் விடு​தி​யில் அவரைப் பார்க்க கட்சி நிர்​வாகி​கள், முக்​கிய பிர​முகர்​கள் யாருக்​கும் அனு​மதி அளிக்​கப்​பட​வில்​லை. இந்​நிலை​யில் நேற்று மாலை திண்​டுக்​கல் மாவட்ட, கட்சி நிர்​வாகி​களை அழைத்து முதல்​வர் ஸ்டா​லின் திடீர் ஆலோ​சனை நடத்​தி​னார்.

அதில், அமைச்​சர்​கள் இ.பெரிய​சாமி, அர.சக்​கர​பாணி, எம்​எல்ஏ செந்​தில்​கு​மார் மற்​றும் முக்​கிய நிர்​வாகி​கள் மட்​டுமே பங்​கேற்​றனர். ஒரு மணி நேரத்​துக்​கும் மேலாக நடை​பெற்ற கூட்​டத்​தில் அவர்​களு​டன் தொகு​தி​களில் வாக்​குப்​ப​திவு, வெற்றி வாய்ப்பு நில​வரம், மீண்​டும் ஆட்சி அமைப்​பது, மக்​கள் மனநிலை எப்​படி இருக்​கிறது என்​பது தொடர்​பாக முதல்​வர் ஆலோ​சனை நடத்​தி​னார். அவர்​களும் வெற்​றி​வாய்ப்​புப் பிர​காச​மாக இருக்​கிறது என்று கூறினர்.

தொடர்ந்​து, 2-வது முறை​யாக ஆட்​சி​யைப் பிடித்த கட்சி என்ற பெருமை திமுக​வுக்கு கிடைக்​கும் என்று கூறினர். அதைக் கேட்டு முதல்​வர் மகிழ்ச்சி அடைந்​த​தாக​வும், கொடைக்​கானல் வந்த பிறகு மனதுக்​கும், உடலுக்​கும் புத்​துணர்ச்சி கிடைத்​திருப்​ப​தாக​வும், அதே உத்​வேகத்​துடன் மீண்​டும் திரா​விட மாடல் 2.0 ஆட்சி அமைத்​து, தமிழக மக்​களுக்​குச் சேவை புரி​யும் வாய்ப்பு எனக்​குக் கிடைக்​கும் என்ற நம்​பிக்கை இருப்​ப​தாக​வும் முதல்​வர் கூறிய​தாக திமுக வட்​டாரத்​தில் கூறப்​படு​கிறது.

இதனிடையே 4 நாட்​கள் ஓய்​வுக்​குப்​பிறகு, இன்று (ஏப்​.29) காலை குடும்​பத்​தினருடன் முதல்​வர் கொடைக்​கானலில் இருந்து காரில் புறப்​பட்டு மதுரை சென்​று, அங்​கிருந்​து தனி வி​மானத்​தில்​ சென்​னை திரும்​புகிறார்​.

<div class="paragraphs"><p>கொடைக்கானல் நட்சத்திர ஏரியைச் சுற்றி உற்சாகமாக சைக்கிள் ஓட்டிச் சென்ற முதல்வர் ஸ்டாலின். </p></div>
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in