அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும்: ஸ்டாலின் உறுதி

ஜாக்டோ-ஜியோ நன்றி தெரிவிப்பு மாநாடு
ஜாக்​டோ-ஜியோ கூட்​டமைப்பு சார்​பில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற நன்றி தெரிவிக்​கும் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

ஜாக்​டோ-ஜியோ கூட்​டமைப்பு சார்​பில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற நன்றி தெரிவிக்​கும் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து அமைய​வுள்ள திமுக 2.0 ஆட்​சி​யில் அரசு ஊழியர்​களின் அனைத்து கோரிக்​கைகளும் நிறைவேற்​றப்படும் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உறு​தி​யளித்​தார்.

அரசு ஊழியர்​களின் நீண்ட கால கோரிக்​கையை ஏற்று உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்டத்தை ஜனவரியில் அரசு அறி​வித்​தது. இதற்காக தமிழக முதல்​வருக்கு நன்றி தெரிவிக்​கும் மாநாடு ஜாக்​டோ-ஜியோ கூட்​டமைப்பு சார்​பில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: கருணாநிதி ஆட்​சிக்​காலம்​தான் அரசு ஊழியர்​களின் பொற்​காலம். அரசு ஊழியர் நடத்தை விதி​முறை​களில் ரகசிய குறிப்​பேடு முறை நீக்​கம், குடும்ப பாது​காப்பு நிதி உள்ளிட்ட எண்ணற்ற திட்​டங்​களை திமுக அரசு வழங்​கி​யுள்​ளது. அரசு ஊழியர்​கள் நலனில் அக்​கறை கொண்ட ஒரே இயக்​கம் திமுக​தான். பள்​ளிக்​கல்​வி​யில் இந்​தி​யா​விலேயே 2-வது சிறந்த மாநில​மாக தமிழகம் விளங்க நீங்​களே காரணம். காலை உணவுத் திட்​டம் உள்ளிட்ட பல்​வேறு திட்​டங்​களால் தமிழக அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கவும் நீங்களே காரணம்.

தமிழகத்​துக்​கான வரி பங்கீட்டை மத்​திய அரசு குறைத்து வருகிறது. ஜிஎஸ்டி நடை​முறையால் மாநில அரசு வரிவரு​வாய் குறைந்து கொண்டே செல்​கிறது. இப்​படிப்பட சூழலில் நலத்​திட்​டங்​களை​யும் செயல்​படுத்​தி​யாக வேண்​டி​யுள்​ளது. திட்​ட​மிட்டே நிதி நெருக்​கடியை உரு​வாக்​கு​கிறார்​கள். நிதி நெருக்​கடியை​யும், நிர்​வாக நெருக்​கடியை​யும் சமாளித்​து​தான் அரசு ஊழியர்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்றி உள்​ளோம். அதி​முக ஆட்​சிக்​காலத்​தில் அரசு ஊழியர்​களின் உரிமை​கள் பறிக்​கப்​பட்​டன.

உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தியத் திட்​டத்தால் அரசு கூடுதலாக ரூ. 13 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்​டும். மேலும் ஆண்டு​தோறும் ரூ.11 ஆயிரம் கோடிஅரசின் பங்​களிப்​பாக வழங்கவேண்​டும். நாங்​கள் சொன்னதைச்செய்​வோம். தொடர்ந்து அமைய​வுள்ள திமுக 2.0 ஆட்சி​யில் அரசு ஊழியர்​களின் அனைத்து கோரிக்​கைகளை​யும் நிச்​சயம் நிறைவேற்​று​வோம். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

விழா​வில், அமைச்​சர்கள் எ.வ.வேலு, மா.சுப்​பிரமணி​யன், அன்​பில் மகேஸ், ஜாக்​டோ-ஜியோ மாநில ஒருங்​கிணைப்​பாளர்கள் இரா.​தாஸ், மு.​பாஸ்​கரன், கு.​தி​யாக​ராஜன், ஒருங்​கிணைப்​பாளர்​ அ.வின்​சென்ட்​ பால்​ராஜ் உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

<div class="paragraphs"><p>ஜாக்​டோ-ஜியோ கூட்​டமைப்பு சார்​பில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற நன்றி தெரிவிக்​கும் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.</p></div>
“குரூப் 2 தேர்வு ஏன் ரத்து செய்யப்பட்டது என தெரியவில்லை” - அமைச்சர் ஐ.பெரியசாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in