திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு: கன்னியாகுமரியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு நிறுவப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். உடன் பேரவைத் தலைவர் மு.அப்பாவு உள்ளிட்டோர். | படங்கள்: மு.லெட்சுமி அருண். |

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு நிறுவப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். உடன் பேரவைத் தலைவர் மு.அப்பாவு உள்ளிட்டோர். | படங்கள்: மு.லெட்சுமி அருண். |

Updated on
2 min read

நாகர்கோவில்: கன்​னி​யாகுமரி​யில் திருவள்ளுவர் சிலை வெள்​ளி​விழா அலங்​கார வளைவை முதல்​வர் ஸ்​டா​லின் நேற்று திறந்​து​வைத்​தார். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 2 நாள் சுற்​றுப்​பயண​மாக நேற்று மதி​யம் கன்​னி​யாகுமரி மாவட்​டம் வந்​தார். அங்கு அரசு விருந்​தினர் மாளிகை அருகே ரூ.1.45 கோடியில் அமைக்​கப்​பட்ட திருவள்ளுவர் சிலை வெள்​ளி​விழா அலங்​கார வளைவை திறந்​து​ வைத்​தார்.

பேரவைத் தலை​வர் அப்​பாவு, அமைச்​சர் மனோ தங்​க​ராஜ், விஜய் வசந்த் எம்​.பி. எம்​எல்​ஏக்​கள் ராஜேஷ்கு​மார், பிரின்​ஸ், தாரகை கத்​பர்ட், சட்​டப்​பேரவை முன்​னாள் தலை​வர் ஆவுடையப்​பன், மாநில உணவு ஆணைய தலை​வர் சுரேஷ்​ராஜன், ஆட்​சி​யர் அழகுமீ​னா, முன்​னாள் எம்​எல்ஏ ஆஸ்​டின், நாகர்​கோ​வில் மேயர் மகேஷ் உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்​து, கன்​னி​யாகுமரி அருகே பெரு​மாள்​புரம் இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாமில் ரூ.7 கோடியே 85 லட்​சம் செல​வில் கட்​டப்​பட்ட 90 வீடுகளை முதல்​வர் பார்​வை​யிட்​டார். பின்​னர், அந்த வீடு​களை முகாமில் வசிக்​கும் மக்​களைக் கொண்டே திறந்​து​வைத்​தார்.

மாலை​யில் கன்​னி​யாகுமரி​யில் இருந்து புத்​தளம் கல்​லடி​விளை வந்த முதல்​வர் அங்​கு, நாகர்​கோ​வில் மாநக​ராட்சி மேயர் மகேஷ் சொந்த செல​வில் அமைத்​த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் முழுஉரு​வச் சிலை, ஸ்​டா​லின் படைப்​பகம் ஆகிய​வற்றை திறந்து வைத்​தார்.

பின்னர் கன்​னி​யாகுமரி, புத்​தளம் ஆகிய இடங்​களில் காரை விட்டு இறங்கி சற்று தூரம் நடந்து சென்​று, பொது​மக்களை சந்​தித்​தார். அவர்​களிடம் உரை யாடியதுடன் அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்​களை​யும் வாங்​கிக் கொண்​டார்.

நாகர்​கோ​வில் வேப்​பமூடு சந்​திப்பு சர்​.சி.பி.​ராம​சாமி அய்​யர் நினைவு பூங்​கா​வில் ரூ.50 லட்​சம் மதிப்​பீட்​டில் அமைக்​கப்​பட்ட தியாகி பொன்​னப்​ப​நா​டார் சிலையை இரவு 7 மணி​யள​வில் திறந்​து​வைத்​தார்.

இன்று காலை 9.30 மணி​யள​வில் நாகர்​கோ​வில் கன்​கார்​டியா பள்ளி மைதானத்​தில் நடை​பெறும் அரசு விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கலந்​து​கொண்​டு, பயனாளிகளுக்கு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கி​யும், ஐடி பார்க் உட்பட புதிய திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​யும், முடிவுற்ற பணி​களை திறந்​து​வைத்​தும் பேசுகிறார். காலை 11 மணி​யள​வில் தூத்​துக்​குடி செல்​லும் அவர், அங்​கிருந்து மதி​யம் விமானம் மூலம் சென்னைக்கு புறப்​படு​கிறார்.

இலங்கை தமிழருக்கு குடியுரிமை:

பெரு​மாள்​புரத்​தில் இலங்​கைத் தமிழர் மறு​வாழ்வு முகாமில் புதி​தாகக் கட்​டப்​பட்​டுள்ள 90 வீடு​களை திறந்து வைத்த பின்​னர், முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது: இலங்​கைத் தமிழ்ச் சொந்​தங்​களுக்கு நிரந்​தரக் குடி​யிருப்​பு​களை வழங்கி வரு​கிறோம். நிரந்​தரக் குடி​யுரிமை​யும் பெற்​றுத் தர போராடு​வோம்.

இலங்​கைத் தமிழர்​களுக்கு வீடு​கள், அவர்​களின் குழந்​தைகள் உயர்​கல்வி பயில 3 கல்​வி​யாண்​டு​களில் 5,771 மாணவர்​களுக்கு ரூ.11.07 கோடி கல்வி உதவித்​தொகை மற்​றும் சுயஉதவிக் குழுக்​களுக்கு நிதி, திறன் மேம்​பாட்​டுப் பயிற்சி வழங்​கி, அவர்​களின் வாழ்​வா​தா​ரம் பாது​காக்​கப்​படுகிறது.

நீண்​ட​கால​மாக இந்​தி​யா​வில் வசிப்போருக்கு நியாய​மாகக்கிடைக்க வேண்​டிய குடி​யுரிமையை இந்​திய அரசு விரைந்து வழங்​கும் என்று எதிர்​பார்க்​கிறோம். அது​வரை, நமது தமிழ்ச் சொந்​தங்​களுக்​கான குரல்​ தொடர்ந்​து ஒலிக்​கும்​. இவ்​வாறு கூறியுள்​ளார்​.

<div class="paragraphs"><p>கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு நிறுவப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். உடன் பேரவைத் தலைவர் மு.அப்பாவு உள்ளிட்டோர். | <em>படங்கள்: மு.லெட்சுமி அருண்.</em> |</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 25 பிப்ரவரி 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in