‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்களுக்கு வருவோருக்கு அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும்: முதல்வர் அறிவுறுத்தல்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்களுக்கு வருவோருக்கு அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும்: முதல்வர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்​களுக்கு வரும் மக்​களுக்கு குடிநீர், கழிப்​பறை தேவைகளை நிறைவேற்ற வேண்​டும் என்று அதி​காரி​களுக்கு முதல்​வர் ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​னார்.

தமிழகத்​தின் அனைத்து மாவட்​டங்​களி​லும் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்​துவ முகாமை முதல்​வர் ஸ்​டாலின் கடந்த ஆக.2-ம் தேதி சென்​னை​யில் தொடங்கி வைத்​தார். இந்த உயர் மருத்​துவ சேவை சிறப்பு முகாம் ஒன்​றுக்கு ரூ.1.08 லட்​சம் வீதம் மாநிலம் முழு​வதும் மொத்​தம் 1,256 முகாம்​களுக்கு ரூ.13.58 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இம்​மு​காம்​களில் 40 வயதுக்கு மேற்​பட்​டோர், நீரிழிவு மற்​றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள், மனநல பாதிப்​புடையோர், இதய நோயாளி​கள், கர்ப்​பிணி​கள் மற்​றும் பாலூட்​டும் தாய்​மார்​கள், வளர்ச்சி குன்​றிய குழந்​தைகள், மாற்​றுத் திற​னாளி​கள், பழங்​குடி​யினர் மற்​றும் சமூக-பொருளா​தார ரீதி​யில் பின்​தங்​கிய மக்களுக்கு இம்​மு​காம்​களில் முன்னுரிமை வழங்​கப்​பட்டு வரு​கிறது. நலம் காக்கும் ஸ்டாலின் திட்​டத்​தில் இது​வரை 632 முகாம்​கள் நடத்​தப்​பட்​டதில் 9 லட்சத்து 86,732 பேர் பயனடைந்​துள்ளனர்.

இந்​நிலை​யில், சென்னை தலை​மைச் செயல​கத்​தில், இத்திட்​டத்​தின் செயல்​பாடு​கள் குறித்த ஆய்​வுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. முதல்​வர் ஸ்​டா​லின் தலை​மை​யில் நடந்த கூட்​டத்​தில் சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், சுகா​தா​ரத் துறை செயலர் ப.செந்​தில்​கு​மார், உணவு பாதுகாப்பு மற்​றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் ஆர்​.லால்​வே​னா, மாற்றுத் திற​னாளி​கள் நலத்​துறை செயலர் எஸ்.மது​ம​தி, ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நலத்​துறை செயலர் க.லட்​சுமி பிரியா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

கூட்​டத்​தில் முதல்​வர் பேசும் போது, முகாம்​களுக்கு வரும் மக்​களுக்கு குடிநீர், இருக்கை வசதி​கள், கழிப்​பறை உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள் செய்து தரப்​படு​வதை உறுதி செய்ய வேண்டும். முகாம்​களுக்கு வரும் மக்களுக்கு வழி​காட்​டு​தல்​களை வழங்​கிட போது​மான அளவுக்கு தன்​னார்​வலர்​களை நியமிக்க வேண்​டும்.

முகாம்​கள் நடைபெறும் இடங்கள் குறித்து குறித்து விளம்​பரம் செய்​து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்​டும். பாலூட்​டும் தாய்மார்கள், முதி​யோர், மாற்​றுத் திற​னாளிகளுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்​டும். மேல் சிகிச்சைக்காக பரிந்​துரை செய்​யப்​படு​பவர்​கள் தொடர் சிகிச்சை பெறுவதை உறுதி செய்​திட வேண்​டும் என்று அறி​வுறுத்​தி​னார்.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்களுக்கு வருவோருக்கு அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும்: முதல்வர் அறிவுறுத்தல்
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in