சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் வாகனம் நிறுத்துவதில் போலீஸாருக்கு இடையே வாக்குவாதம்

சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் வாகனம் நிறுத்துவதில் போலீஸாருக்கு இடையே வாக்குவாதம்
Updated on
1 min read

சென்னை: ​சாஸ்​திரி நகர் காவல் நிலை​யத்​தில் வாக​னம் நிறுத்துவதில் போலீ​ஸாருக்கு இடையே வாக்​கு​வாதம் நடந்த வீடியோ சமூக வலைத்​தளங்​களில் வைரலாகி வரு​கிறது.

ஜேசிபி மூலம் அகற்றம்: பெசன்ட் நகர் பேருந்து நிலை​யம் அருகே சாஸ்​திரி நகர் காவல் நிலை​யம் அமைந்​துள்​ளது. இந்த காவல் நிலை​யத்​தின் சட்​டம் ஒழுங்கு ஆய்​வாளர் ரோகினி நேற்று காலை திடீரென காவல் நிலை​யம் அருகே நிறுத்தி வைக்​கப்​பட்ட வாகனங்​களை ஜேசிபி மூலம் அகற்​றி​யுள்​ளார். இதை பார்த்த மற்ற போலீ​ஸார் மற்​றும் வாகன உரிமை​யாளர்​கள், ஆய்​வாளர் ரோகினி​யிடம் கேட்​டுள்​ளனர்.

அப்​போது அவர், ஒரு மாத​மாக இங்கே வாக​னத்தை நிறுத்த வேண்​டாம் என கூறி வரு​கிறேன், யாரும் கேட்​ப​தில்​லை. இந்த காவல் நிலை​யத்​தில் சட்​டம் ஒழுங்கு தொடர்​பான வாக​னங்​கள் மட்​டுமே நிறுத்த வேண்​டும். அதை தவிர, குற்​றப்​பிரிவு, போக்குவரத்து போலீ​ஸாரின் வாக​னங்​கள் நிறுத்​தக் கூடாது என கூறியுள்ளார்.

இதையடுத்​து, மற்ற காவல் நிலைய அதி​காரி​கள் சட்​டம் ஒழுங்கு ஆய்​வாளர் ரோகினி​யுடன் வாக்​கு​ வாதத்​தில் ஈடு​பட்​டனர். இச்சம்பவம் தொடர்​பான வீடியோ சமூக வலைத்​தளங்​களில்​ வேக​மாக பரவி வரு​கிறது.

சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் வாகனம் நிறுத்துவதில் போலீஸாருக்கு இடையே வாக்குவாதம்
சென்னையில் தினமும் 400 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளித்திட அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in