சென்னையில் தினமும் 400 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளித்திட அறிவுறுத்தல்

சென்னையில் தினமும் 400 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளித்திட அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ​மாநக​ராட்​சி​யில் தின​மும் 400 நாய்​களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்​கொள்ள வேண்​டும் என்று அதி​காரி​களுக்​கு, நகராட்சி நிர்​வாகத் துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி அறிவுறுத்தி​யுள்​ளார்.

சென்னை மாநக​ராட்சி பகு​தி​களில், 1.80 லட்​சம் தெரு நாய்​கள் உள்​ள​தாக கணக்​கிடப்​பட்​டுள்​ளது. மாநக​ராட்சி சார்​பில், வெறி​நாய்க் கடி தடுப்​பூசி செலுத்​தும் தீவிர சிறப்பு முகாம் வாயி​லாக, இது​வரை 1.68 லட்​சம் தெரு​நாய்​களுக்கு ரேபிஸ் தடுப்​பூசி செலுத்தப்பட்டுள்ளது. 71,388 செல்​லப் பிராணி​களுக்கு ரேபிஸ் தடுப்​பூசி செலுத்​தி, மைக்​ரோசிப் பொருத்​தப்​பட்டு உரிமம் வழங்கப்​பட்​டுள்​ளது.

தெரு நாய்​களை கட்​டுப்​படுத்​து​வதற்​காக புளியந்​தோப்​பு, லாய்ட்ஸ் காலனி, கண்​ணம்மா பேட்டை உள்​ளிட்ட 10 இடங்​களில் நாய்​கள் இனக் கட்​டுப்​பாடு மையங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன.

மேலும், 4 இடங்​களில் நாய்​கள் இனக்​கட்​டுப்​பாடு மைய பணி நடை​பெற்று வரு​கின்​றன. பெருங்​குடி​யில் உள்ள நாய்​கள் இனக் கட்​டுப்​பாடு மையம் தற்​காலிக​மாக நோய்​களால் பாதிக்​கப்​பட்ட நாய்​களுக்​கான காப்​பக​மாக செயல்​பட்டு வரு​கிறது. மணலி மற்றும் பெருங்​குடி​யில் நோயால் பாதிக்​கப்​பட்ட தலா 250 நாய்களுக்​கான காப்​பகம் அமைக்​கும் பணி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

திரு.​வி.க.நகர், நுங்​கம்​பாக்​கம் உள்​ளிட்ட 6 இடங்​களில் செல்​லப் பிராணி​களுக்​கான சிகிச்சை மைய​மும் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதனிடையே, புளியந்​தோப்பு பகு​தி​யில் உள்ள நாய்​கள் இனக்கட்டுப்​பாடு மையத்தை நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி நேற்று நேரில் ஆய்வு செய்​தார். அப்​போது, அங்கு நாய்​களுக்கு கருத்​தடை அறுவை சிகிச்சை நடவடிக்​கைகளை​யும், செல்​லப் பிராணி​களுக்கு வழங்கப்​படும் சிகிச்​சைகளை​யும் பார்​வை​யிட்​டார்.

பின்​னர், ககன்​தீப் சிங் பேடி, அதி​காரி​களுக்கு அறிவுறுத்தியதாவது: தற்​போது மாநக​ராட்​சி​யில் நாளொன்​றுக்கு 200 தெரு நாய்களுக்கு கருத்​தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்​படு​கிறது. தெரு நாய்​களை கட்​டுப்​படுத்த நாளொன்​றுக்கு சராசரி​யாக 350 முதல் 400 தெரு நாய்​களுக்கு கருத்​தடை அறுவை சிகிச்சை மேற்​கொள்ள வேண்​டும். அனைத்து தெரு நாய்​களுக்​கும், செல்​லப் பிராணி​களுக்​கும் வெறி ​நாய்க்​கடி தடுப்​பூசி செலுத்தி 100 சதவீதம் வெறி​நாய்க்​கடி நோய் தடுப்​பூசி செலுத்​தப்​பட்​டுள்​ளதை உறுதி செய்ய வேண்​டும்.

முதல்​வர் விஜய் உத்​தர​வின்​படி மாநக​ராட்​சிப் பகு​தி​களில் தெரு நாய்​களை கட்​டுப்​படுத்தி மக்​களைப் பாது​காக்க உரிய நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் அறி​வுறுத்​தி​னார். இந்த ஆய்​வின் போது, மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​. சமீரன், இணை ஆணை​யர்​கள் வீ.ப.ஜெயசீலன் (சு​கா​தா​ரம்), செ.சரவணன் (பணி​கள்), மத்​திய வட்​டார துணை ஆணை​யர் எச்.ஆர்​.க​வுஷிக், தலைமை கால்​நடை மருத்​துவ அலு​வலர்​ கமால்​ உசேன்​ உள்​ளிட்​டோர்​ உடனிருந்​தனர்.

சென்னையில் தினமும் 400 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளித்திட அறிவுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கொல்கத்தாவில் இன்று யோகா தின விழா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in