‘கிக்’ தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

‘கிக்’ தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

சென்னை: தமிழ்​நாடு இணை​யம் சார்ந்த ‘கிக்’ (Gig) தொழிலாளர்கள் நல வாரி​யத்​தில் பதிவு பெற்ற 100 தொழிலா​ளர்​களுக்கு மானிய விலை​யில் இ-ஸ்கூட்டர்கள் வழங்​கும் திட்​டத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைத்​தார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழ்​நாடு இணை​யம் சார்ந்த ‘கிக்’ தொழிலா​ளர்​கள் நல வாரி​யம் 2023-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​டது. இவ்​வாரி​யத்​தில் 23,687 தொழிலா​ளர்​கள் பதிவு செய்​துள்​ளனர்.

இந்​தத் தொழிலா​ளர்​கள் ஓய்வு எடுக்​கவும், செல்போனுக்கு சார்ஜ் செய்​வதற்​கும், கழிப்​பறை வசதி​களு​டன் கூடிய குளிரூட்​டப்​பட்ட ஓய்​வுக்​கூடங்​கள் சென்னை, கோயம்​புத்​தூர் நகரங்​களில் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அவர்​களுக்கு ரூ.5 லட்​சம் வரையி​லான குழு காப்​பீட்​டுத் திட்​ட​மும் செயல்​படுத்​தப்​படு​கிறது.

மேலும், ‘கிக்’ தொழிலா​ளர்​களின் வாழ்​வா​தா​ரத்தை மேம்​படுத்​தும் வகை​யில் 2 ஆயிரம் தொழிலா​ளர்​களுக்கு புதிய ‘இ-ஸ்கூட்டர்’ வாங்​கும் செல​வினத்​தில் ரூ.20 ஆயிரம் மானிய​மாக வழங்​கும் புதிய திட்​டம் பட்​ஜெட்​டில் அறிவிக்​கப்​பட்டு ரூ.4 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டது.

அதன்​படி, தமிழ்​நாடு இணை​யம் சார்ந்த ‘கிக்’ தொழிலா​ளர்​கள் நல வாரி​யத்​தில் பதிவு​பெற்ற 100 தொழிலா​ளர்​களுக்கு புதிய இ-ஸ்கூட்டர் வாங்க மானி​யம் வழங்​கும் திட்​டத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார்.

இந்​நிகழ்​வில், அமைச்​சர் சி.​வி.கணேசன், தலை​மைச்​செயலர் நா.​முரு​கானந்​தம், தொழிலா​ளர் நலத்​துறை செயலர் கோ.வீர​ராக வ​ராவ், தொழிலா​ளர் ஆணை​யர் சி.அ.​ராமன், உடலுழைப்பு தொழிலா​ளர் நலவாரிய செய​லா​ளர் திவ்​ய​நாதன், தொழிலா​ளர் கூடு​தல் ஆணை​யர் எ.யாஸ்​மின்​பேகம்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

‘கிக்’ தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை: தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக முடிக்க உத்தரவிடக்கோரி மனு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in